உடைகள் அங்குங்கும் கலைந்து கிடக்க ,குடிலில் உள்ளே தரையில் விரிப்பு ஏதுமின்றி ,சௌமீயோ கார்த்திக் அணைப்பில் அவனை பார்த்தப்படி கிடக்க,"சாக்கோ பார், உனக்கு குளிரா இல்லையா ???நம்ம ரூமிற்க்கு போயிடலாமா", என்று சௌமீயின் கன்னத்தில் இருந்த முடிக்கற்றை ஒதுக்கிக் கொண்டே கேட்டான்.
அவன் கேட்டதில் நியாயம் இருக்க தான் செய்தது, கார்த்திக்கின் அவசரத்தினால் தங்கள் அறைக்கு செல்ல முடியாமல் போக,சௌமீயோ தான் சென்று தரை விரிப்பு எடுத்து வருவதாக சொல்லிய வார்த்தைகளை காதில் வாங்காமல் போனது மட்டுமில்லாமல் சௌமீயின் கவனம் சிதறிவிடாமல் இருக்க அவளின் பலவினம் அனைத்தும் சுலபமாக கண்டுக்கொண்டு அவளை "கார்த்திக், கார்த்திக் "என்று முணுமுணுக்க வைத்து பித்தாக்கி நிறுத்தியிருந்தான்.
,தன்னவன் அருகில் கிடக்கும் இந்த நிமிடம் இப்படியே நின்றுவிடாதா என்று நினைப்பவளுக்கு அந்த பொழுதில் குளிர்யென்ன, மழையென்ன என்று தானே தோன்றும்
அவளும் பதிலுக்கு"எனக்கு குளிரல ,நாம் கொஞ்ச நேரம் இங்கேயே இருப்போமா"என்று கொஞ்சலாக கேட்க.அவனுக்கும் இங்கிருந்து போக எண்ணமெல்லாம் இல்லை, அவளுக்காக தான் அவன் கேட்டதே,அவளே வேண்டாம் என்று சொல்லவும், அவனும் அமைதியானான்.பின் சௌமீ , கார்த்திக்கிடம்," உனக்கு எங்கிட்ட ஏதாவது கேட்கணுமா"என்று யோசனையோடு பார்க்க
அவளை நிதானமாக பார்தவன்"இல்ல நானும் கேட்கணும் தான் நினைச்சேன்,எப்படி நான் மதுவை் கல்யாணம் செய்துப்பேன் நினைச்ச "என்று கடுப்பாக கேட்க.
அவன் கேட்ட கேள்வியில் இருந்த நியாயம் புரிய, கண்களில் நீர் தளும்ப"இல்லடா,நான் விட்டை விட்டு போன பிறகு நீ எங்கிட்ட சரியாகவே பேசில.....அனு வேற நீ இப்படி உன் புருஷனை விட்டுட்டு வந்தா, உங்களுக்கு நடுவில் வேற பொண்ணு வரபோறன்னு சொல்லி குழப்பிட்டா... நீங்களும் எதையும் விளக்கி சொல்லாமல் இருந்திங்க.....அதனால் வந்த குழப்பம் தான் அது"என்று தவறு செய்த குழந்தை போல் முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல.
YOU ARE READING
அவளும் நானும்(Completed)
Romanceநாயகன் கார்த்திக் நாயகி சௌமியா . எதிர்பாராத இவர்களின் திருமணம் அதை தொடர்ந்த சம்பவங்களும் நம் கதை