அவளும் நானும்-11

1.1K 55 11
                                    

அன்று சனிக்கிழமை இரவு இன்றாவது கார்த்திக் வருவான் என்று சௌமீ எதிர்பார்த்தது காத்திருந்தாள், ஆனால்  அவன் வருவது போல் எந்த அறிகுறியும் தெரியாமல் போகவே,மதுவிடம் மெதுவாக பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தாள்,தருனும், அஜய்யும் ஏதோ ப்ளேஸ்டேசனில் மும்முரமாக விளையாடிக் கொண்டிருக்க
" என்ன மது, உன் ஃப்ரண்ட் ஊரில் இல்லையா," என்று கேட்க
மதுவோ‌ உள்ளுக்குள் உற்சாகமானாள், இரண்டு வாரமாக சௌமீயின் கண்கள், கார்த்திக்கை தேடுவதையும், அவன் வரமால் போனதால் அவன் சோர்ந்து போவதையும் அவள் முன்னமே கண்டு கொண்டாள்.

அதை கார்த்திக்யிடமும் தெரியப்படுத்தினாள், உன்னை தான் தேடுறா ,நீ வரணும் என்றவள் கேட்க, கார்த்திக் "முடியவே முடியாது"என்று மறுத்துவிட்டான். "அவ இப்போ என்னை எதற்கு தேடணும் ,மது..... முன்னமே என்னை தொடரக்கூடாது, என் வாழ்க்கையில் நீ வரவே கூடாது என்று எச்சரித்து இருக்கிறாள், நான் இப்போது வந்தால்,நீ கொடுத்த வாக்கை எப்படி உடைக்கலாம் என்று பிரச்சினை பெரிதாக வாய்ப்பு இருக்கிறது" என்று தீவிரமாக யோசிக்க.

"இல்லடா, அவளை பார்த்தால் சண்டை க்கு இருப்பவள் போல‌ தெரியவில்லை கார்த்திக், அவள் கண்ணில் எதிர்பார்ப்பு, ஏமாற்றம் எல்லாவற்றையும் நானே பார்த்தேன்'என்று தன் தோழிக்கு பரிந்துக்கொண்டு வர

"அம்மா,தாயே உன் ஆரூடம் எல்லாம் நான் நம்ப தயாராக இல்லை,முன்னமே நான் நிறைய ஏமாந்து போயிருக்கேன்,ஆளைவிடு," என்று கைகூப்பி கேட்க

மதுவின் முகம் வாடி போக,அதை பார்த்தவன்" இல்லை மது,இப்போ தான் அவ நிம்மதியாக இருக்கா, எனக்கு இது தான் வேண்டும்,அவள் வாழ்க்கையில் செய்த தவறுகளுக்கு இதை பிராயச்சித்தமாக இதை நினைக்கிறேன்."என்று முடிக்க, மதுவால் ஏதும் சொல்ல முடியவில்லை

"மது"என்று வேகமாக உலுக்க,நிகழ்காலதிற்கு வந்தவள்,"என்ன சௌமீ" என்று விழிக்க

"இல்லை மது.....அது.... இப்போ, என்று உளற

மதுவோ " இல்லடா, அவனுக்கு மனசு சரியில்லையாம் ,வர முடியாது என்று சொல்லி விட்டான்" என்றவள் , டக்கென்று வேறு ஏதோ பேச்சை மாற்றினாலும்,

அவளும் நானும்(Completed)Where stories live. Discover now