அவளும் நானும் -16

1.1K 62 12
                                    

கார்த்திக்கை பார்க்க பார்க்க சௌமீயின் கண்களில் தாரை தாரை கண்ணிர் வழிந்துக் கொண்டிருந்தது, இவனுக்கு நான் என்னதான் செய்தேன், எதற்காக என் மீது இவ்வுளவு காதல்.இதற்கெல்லாம் எனக்கு என்னதான் தகுதி இருக்க, எப்போழுதும் இவன் மனசை தான் உடைச்சிருக்கேன்,இவன் காட்டற அன்புக்கு உண்மையா இருந்ததேயில்லை, என்ற உண்மை சுட, மனம் கசங்கி தான் போனாள்.

இப்போது கூட, அவன் என்ன கேட்டிருந்தாலும் அவள் மறுக்கும் நிலையில் அளவில்லை என்ற உண்மையை அவன் நன்றாக உணர்ந்திருந்த போதும், அவன் கேட்ட ஆசையை நினைத்து பெருமை பொங்க கார்த்திக்கை பார்த்தாள்.

காலையில் சூரியனின் ஒளி அறையை நிரப்பிய போது தான் கார்த்திக் கண்‌விழித்தான்.சோம்பல் முறிக்க தன் கைகளை எடுக்க முயற்சிக்க, அப்பொழுது தான் அவன் சௌமீயை அவன் கவனித்தான், அவன் வலக்கையில் அவள் தலை வைத்து படுத்திருக்க, அவன் மார்பில் தலை பார்த்திருந்தால்,அவள் கைகள் கார்த்திக்கின் இடையை பற்றியிருந்தது.கார்த்திக்கிற்கு நடப்பது கனவா? நினைவா? என்று ஒன்றும் புரியவில்லை, நேற்று இரவு நடந்த அனைத்தும் நினைவுக்கு வர பெரிய புன்னகை முகம் முழுவதும் பரவியது.

அதை விடவும் பெரியது இன்று நடப்பது,சௌமீ தன்னை அணைத்து படுத்திருந்த நிலையை விட, சந்தோஷ பொழுது அவனுக்கு கிடைக்குமா என்று சந்தேகம் தான்.இப்படி ஒரு நாளுக்காக தான் காத்திருந்தான், இமைக்காமல் அவள் முகம் பார்த்து கிடந்தான், சற்று நேரத்தில் அவள் அசைவது தெரிய, படக்கென்று கண்களை மூடிக்கொண்டான்.

சௌமீ கண் விழித்தவள், இரவு வெகு நேரம் அவனை பார்த்தபடி இருந்தவள், பின்னிரவில் தூக்கம் வரவும், தலையனையில் அவனை கிடத்தி விட்டு அவன் அணைப்பில் கண் உறங்கினாள், இன்னும் அவன் தூங்குவதை பார்த்தவள்,அவன் கண்,காது,உதடு என்று மெதுவாக விரல்களால் வருட, சரியாக அதே நேரம் கார்த்திக் விழித்து பார்க்க, வசமாக மாட்டிக் கொண்டாள், எழுந்து வெளியே போக முயற்சிக்க,
அவளை இழுத்த வேகத்தில் கார்த்திக் மேலே விழுந்தாள்.

அவளும் நானும்(Completed)Where stories live. Discover now