அவளும் நானும்-18

1.2K 64 22
                                    

Hi friends,this epi is bigger one nearly 1800, reason behind this ,if I keep contents into two parts it won't give same emotions,what I'm trying feed here,so bare with my lenghty epi ,if you like this story kindly give star and give your comments which is really mean to me.Merry Christmas friends

கார்த்திக் வார்த்தைகளை கேட்ட‌பின் அங்கு நிற்க பிடிக்காமல், திரும்பவும் விடுதிக்கு செல்ல, அங்கோ அவளால் ஒரு நிமிடமும் நிம்மதியாக இருக்க முடியாமல் தவித்தாள்.

எந்த தைரியத்தில் கார்த்திக்கிடம் அப்படி வார்த்தைகளை விட்டோம், என்று இரவு‌ துக்கத்தை இழந்திருந்தாள்.

அன்றைய தினம் படுக்கையில் ஏதோ நோயால் பாதிக்கப்பட்டவள் போல் ,பசி மறந்து கிடந்தாள், இரண்டு முறை கேண்டினில் வேலை செய்யும் ரஞ்சனி அக்கா உணவு உண்ண அழைத்தும், உடம்பு சரியில்லை என்று சொல்லி மறுத்து விட்டாள்.

பசி மயக்கத்தில் அவள் அப்படியே உறங்கி விட்டாள்.அடுத்த நாள் அனு சௌமீயை பார்த்ததும் ஏதோ பிரச்சினை என்று அவள் உணர்ந்துக் கொண்டாள்‌

மெதுவாக சௌமீயிடம் என்னவென்று கேட்க,அவளோ வெடித்து அழுதாள்."தப்பு செஞ்சிட்டேன் அனு,தேவையில்லாமல் என் கையில் இருந்த பொக்கிஷத்தை தொலைச்சிட்டேன்......"என்று உள்ளுக்குள் இருந்த அழுத்தத்தில் உடைந்து அழ,அனுவிற்கு பாவமாக இருந்தது.

"ஏன்டா, என்னாச்சு"என்று விசாரிக்க,சௌமீ நடந்தது பற்றி விவரிக்க அனு பதறிதான் போனாள்.

"ஏதாவது உளறாதே,ஏதோ தப்பா கேட்டுட்டு கற்பனை செய்யாதே .... நிச்சயமாக கார்த்திக் அப்படியெல்லாம் செய்ய வாய்ப்பை இல்லை"என்று அனு தீர்க்கமாக பேச.

"இல்லை அனு, கார்த்திக்கே தான் சொன்னாரு ...... நான் தான் தப்பு செய்ஞ்சிட்டேன், அவரிடம் மனசு விட்டு பேசியிருக்கனும், எல்லாமே என் ஈகோவால் தான்"என்று விடாமல் அழவும்,

"சரி இரு கார்த்திக்கிடம் நானே‌ பேசறேன.....்"என்று அனு முடிக்கும் முன்பே,

"இல்ல அனு, வேண்டாம் ஏற்கனவே எடுத்து முடிவில் என்னால் எந்த பிரச்சனையும் வேண்டாம், நான் இப்படியே இருந்துட்டு போறேன்"என்று அழுத்தமாக சொல்லிட்டு, ஸ்கூலிற்கு நோரமாச்சு நான் தயராகி கிளம்பறேன், என்று அவள் பாத்ரூமிற்குள் புகுந்து கொள்ள.

அவளும் நானும்(Completed)Where stories live. Discover now