வீட்டிற்கு வந்த நண்பர்கள் போட்ட சத்தத்தில் கார்த்திக் நெட்டி முறித்து எழ, அந்த நிமிடம் இது் எந்த இடம் ,என்ன சத்தம் என்று புரியாமல் முழிக்க.
இங்கு சௌமீ ஒரு பக்கம் செய்வதறியாமல் பார்க்க, அதற்குள் நண்பர்கள் அவர்கள் அருகில் வரவும்"என்னடா,எதுக்கு இப்போ கூச்சல்" என்றான் கடுப்பாக.
"ஒன்றுமேயில்லை மச்சான், சும்மா தான், என்று சொல்லி விட்டு சத்தம் போட்டு மூவரும் சிரிக்க.
சௌமீயோ தலையில் அடித்துக்கொண்டாள்." என்ன மச்சி, நாங்க எதுக்கு கலாய்க்கிறோம் என்று தெரியலையா" என்று தருண் கேட்க
அஜயோ "மிஸ்டர் கார்த்திக், உங்களுக்கு ஒரு குறும்படம் காத்திருக்கு, பார்க்கலாமா என்று பிக்பாஸ் மோடில் கேட்க.
தருண் தன் போனில் எடுத்து ஃபோட்டோ காட்ட,அதை பார்த்தவன் சௌமீயே பார்க்க,அவளோ எதையாவது சொல்லி சாமாளி என்று கண்களாலேயே கெஞ்ச.
அதை கண்டுகொண்டவன் "டேய், இதெல்லாம் அநியாயம், ஊஞ்சலில் உட்கார்ந்து பேசிட்டு இருந்தோம், களைப்பில் அப்படியே தூங்கிட்டேன், என் பெண்டாட்டி மடியில் தானே தூங்கினேன், சிங்கல்ஸாக இருந்தால் அப்படித்தான் எல்லாம் தப்பாவே தெரியும், ராஸ்கல்ஸ்" என்று அவர்களை கலாய்த்து விட்டு
"நீ வா சௌமீ நாம் போகலாம்" என்று உள்ளே செல்ல, நாள் முழுவதும் இருவரையும் கலாய்த்து கொண்டு இருக்க, இனிமையாக கழிந்தது,அன்றைய தினம்.
ஒரு வாரம் மொத்தமாக கரைந்திருக்கும், விடியற்காலையில் சௌமீ நல்ல தூக்கத்தில் இருக்க, அவள் போன் அலறியது, கார்த்திக்கோடு இரவு வெகு நேரம் பேசிவிட்டு தூங்குவதால்,அவளால் தூக்கத்தில் இருந்து எழ தாமதமாகவே, கால் கட்டாகி போனது, சரியென்று அவள் திரும்பவும் தூங்க முயல, அப்பொழுது மறுபடியும் கால் வரவும்,அவள் போனை எடுக்க அதில் "அண்ணன்"என்று வரவும் பதறி அடித்துக் கொண்டு எழுந்தவள்.
"டே ,அண்ணா .... என்னாச்சு அப்பா, அம்மா எல்லோரும் நல்ல இருக்காங்க தானே, இவ்வளவு காலையில கூப்படற" என்று பதற
YOU ARE READING
அவளும் நானும்(Completed)
Romanceநாயகன் கார்த்திக் நாயகி சௌமியா . எதிர்பாராத இவர்களின் திருமணம் அதை தொடர்ந்த சம்பவங்களும் நம் கதை