part 2

372 36 21
                                    

அம்மு @ சித்து... அமரனின் காரை நோக்கி வந்தவள்.... தன் சைக்கிளை ஓரமாக நிறுத்தியப்படி.. அவள் தாவணியில் முகத்தை துடைத்து கொண்டே அவன் அருகில் வர..

சித்து - என்ன அமரா ரொம்ப நேரம் காத்து கிடக்குறியா.

அமரன் - இல்ல இல்ல இப்ப தான் வந்தேன்... நீ என்ன இப்படி இருக்க..

சித்து - எப்படி இருக்கேன் அசிங்கமா இருக்கேனா

அமரன் - ஹேய் ச்சி அப்படி சொல்லல லூசு.... ஏன் இப்படி வேர்த்து விருவிருத்து வர..

சித்து - உனக்கு என்ன பா.. நீ பெரிய பணக்கார நண்பன்கிட்ட வேல பாக்குற.. அங்க நீ வைக்கிறது தான் சட்டம்... ஆனா நான் அப்டியா சொல்லு... காலையில எழுந்து ஓட ஆரம்பிச்சா நைட்டு வீட்டுக்கு போற வர எனக்கு வேல சரியா இருக்கும்....

அமரன் - உன்னை யாரு இப்படி ஓடி ஓடி உழைக்க சொன்னது...

சித்து - பின்ன உழைக்காம புவாக்கு என்ன பண்றதாம்...

அமரன் - என்னை கட்டிக்கோ... உனக்கு புவா மட்டும் இல்ல எல்லாமே நானே தருவேன்

சித்து - அதெல்லாம் நடக்கும் போது நடக்கட்டும் இப்ப வா கோவிலுக்கு போகலாம்

அமரன் - நான் வெளிய வெயிட் பண்றேன் நீ உள்ள போய் சாமிக்கு சலாம் போட்டுட்டு வா...

சித்து - ஐயோ அப்படி எல்லாம் சொல்ல கூடாது... சாமி கண்ணை குத்திடும்

அமரன் - ஏன்

சித்து - ஆமா... உனக்கு தெரியாதா நம்ம பொய் பேசுனா... தப்பா பேசுனா எல்லாம் சாமி கண்ணை குத்திடும்னு எங்க பாட்டி சொல்லி இருக்காங்க

அமரன் - அப்படி பாத்தா இந்த உலகத்துல பாதி பேருக்கு கண்ணு இருக்காது..

சித்து - அடுத்தவுங்க கத நமக்கு ஏன் நீ வா நம்ம சாமி கும்பிடலாம்...

சித்து தன் அமரனின் கைகளை பிடித்து அழைக்க.... சிறு குழந்தையாக மாறிய அமரன் அவளை பின் தொடர

சித்து - அமரா வா..அர்ச்சனை தட்டு வாங்கிட்டு போகலாம்

அமரன் - ம்...

💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙Where stories live. Discover now