பாகம் 45

143 26 14
                                    

சித்ரா - இல்ல எனக்கு பணம் சொத்து சுகம் எதுவும் வேண்டாம்... என் அமராவை மட்டும் ஒன்னும் பண்ணிடாதீங்க....நான் என் குழந்தைகளுடன் இங்கே இருந்து போய்விடுகிறேன்...அமரன் என்னை காதலித்தை தவிர வேற எந்த பாவத்தையும் பண்ணல.... நான் போறேன்.....

என்று சொன்ன சித்ரா குழந்தை அழகியையும் அமராவதியையும் அழைத்துக் கொண்டு பயத்துடன் அந்த இடத்தை விட்டு நகர முயன்ற அவளின் கரங்களைப் பற்றிய

விஜயகுமார் - நில்லுமா எங்க போற

சித்ரா - இல்ல நான் இங்க வந்து இருக்கவே கூடாது... எனக்கு அப்போவே தெரியும் நான் இங்க வந்தா கண்டிப்பா ஏதோ ஒரு பிரச்சனை நடக்கும் என்று நான் யூகித்துக் கொண்டே இருந்தேன். என்னை மன்னிச்சிடுங்க அமரனை மட்டும் ஒன்னும் பண்ணிடாதீங்க என் இரண்டு குழந்தைகளை நான் தனியாக வளர்த்திடுவேன்...ஆனா தயவு செய்து அமரனை ஒன்னும் பண்ணிடாதீங்க அவனுக்கு இப்போ உங்களுடைய பாசம் தேவை உங்களுக்கும் அமரனுடைய அன்பும் அரவணைப்பும் தேவை நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருங்க நான் போறேன்..

என்று சொன்ன சித்ரா மீண்டும் அந்த இடத்தில் இருந்து நகர பார்த்தவளை விஜயகுமார் தடுத்து நிறுத்தியவர்
கண்கள் கலங்கி....

விஜயகுமார் - போது ம்மா இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படியே ஓடிக்கிட்டே இருக்க போற..பல வருஷத்துக்கு முன்பு என் மகன் என்னையும் உன்னையும் தவிக்க விட்டுட்டு போனதற்கு நான்தான் காரணம்..... அவன் வாழ்க்கையில நடந்த எல்லா கசப்பான சம்பவங்களுக்கும் ஒரே காரணம் நான் தான்......இந்த சொத்து சுகம் அதிகாரம் ஆணவம் அகம்பாவம் இது எல்லாம் என்னை ஒரு மிருகனாக மாத்திடுது....... பெற்ற பிள்ளை கட்டின பொண்டாட்டி இவங்களுடைய காதல் அன்பு பாசம் இவை எதையும் உணர முடியாமல் நான் இது நாள் வரை அரக்கனாக இருந்தேன்......ஆனா எப்ப என்னோட மகன் என்னை விட்டு பிரிந்து போனானோ, எப்ப நான் படுத்த படுக்கையாக இருந்து ஒரு கிளாஸ் தண்ணி கூட ஒருவரின் உதவியோடு குடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதோ....அப்பதான் புரிஞ்சிகிட்டேன்... நம் வாழ்க்கையில பணத்தை மீறி எவ்வளவோ விஷயங்கள் இருக்கு...... என்னுடைய மனைவியை நான் என்னுடைய அதிகாரத்தால் அடிமைப்படுத்தி அவளை நான் துன்புறுத்தி இருக்கிறேன்..... ஆனால் இந்த பணம் அந்தஸ்து இது எதுவுமே என் மனைவிக்கு பெரிதாக படல.... அவள் காதலுக்கு முன்னாடி இது எல்லாமே தூசாக மாறிடுது...... அவளை பார்த்து மன்னிப்பு கேட்டு அவளை மறுபடியும் இங்கே அழைத்துக் கொண்டு வர வேண்டும் என்று தான் நினைத்து அன்று அவளுடைய வீட்டிற்கு போனேன்.......ஆனா என் சூழ்நிலை அங்கே ஏற்கனவே தீ விபத்தில் அவள் சாம்பலாகிய நிலையில் தான் கிடந்தாள்....என்னால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாமல் என் மகனை மட்டும் நான் தூக்கிக் கொண்டு வெளிநாட்டில் அவனை சிறை வைத்தேன்........காரணம் எங்கே என்னுடைய மகன் என்னை விட்டு பிரிந்து விடுவான் என்று எண்ணிதான்.......ஆனால் பணத்தைக் காட்டி அவனை நான் அடிமையாக்க நினைத்தேனே தவிர....அவன் மீது எனக்குள்ள பாசத்தை வெளிப்படுத்த தெரியாத கையாலாகாத ஒரு தந்தையாகத் தான் நானும் இருந்தேன்.... அவன் உன்னை விரும்பியது எனக்கு தெரியாது..... என் பணம் பதவி அந்தஸ்து இது எல்லாம் என்னை பார்வை இருந்தும் குருடனாக வளம் வர செய்தது...நான் படுத்த படுக்கையாக ஆனதும் என் உடன் பிறந்த சகோதரி மாதிரி இதோ ஜானகி தான் என்னை குழந்தை போல பாத்துகிட்டாங்க....தனிமை என்னை பல விஷயத்தை சிந்திக்க வைத்தது...
என் மனைவியின் நேர்மை என் மகனின் கோவம் இது எல்லாத்திலும் உள்ள நியாயத்தை என்னால உணர முடிந்தது....
ஆனா கண் இழந்த பின் சூர்ய நமஸ்காரம் செய்து பிரயோஜனம் இல்லைனு சொல்ற மாதிரி.. என் மகன் என்னை முழுசா வெறுத்த பின் நான் அவனை நெருங்க பயந்தேன்... அது தான் உண்மை.... அவன் இந்த உலகத்துல எந்த மூலையில் இருந்தாலும் அவனை தேடி பிடிக்க எனக்கு 24 மணி நேரம் போதுமானதாக இருந்து இருக்கும்.... ஆனா நான் அவனை தேடல...காரணம் அவன் என்னை வெறுத்து நான் இறந்தாக கருதி தான் என்னை விட்டு அவன் பிரிந்து சென்று இருக்கிறான் என்பதை நான் உணர்ந்து இருந்தேன்.....அதனால தான் நான் அவனை நெருங்க ஆசை படவில்லை... அவன் என் அன்பு மகன்... ஆனால் என்னால அவன் மீது உள்ள அன்பை வெளி படுத்த முடியவே இல்லை.... அவன் எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்னு நினைத்து தான் இதுநாள் வரை அவனை நான் தொல்லை தராமல் இருந்தேன்.... ஆனா சில நாட்களுக்கு முன்பு தான் ஜானகி என் மகன் வெளிநாட்டிலிருந்து இங்கே வந்த செய்தியையும், பல வருடங்களுக்கு முன்பு அவன் சித்ரா என்ற பெண்ணை காதலித்ததாகவும், என்னால் அவன் வாழ்க்கையில் இழந்த நிறைய இழப்பிற்கு காரணம் அவனின் பிறப்பு மட்டுமே என்று நினைத்தவன், அவன் காதலித்த பெண்ணையும் நட்டாத்தில் விட்டு,என்னையும் தவிக்க விட்டு வெளிநாட்டிற்கு சென்றுவிட்டான் என்று ஜானகி அம்மா சொன்னதும் என்னுடைய வேதனை இன்னும் அதிகமாக மாறியது.....மீண்டும் திரும்பி வந்தவன்
சித்ரா சூழ்நிலை கைதியாக 2 பிள்ளைகளுக்கு தாயாக இருந்தவள் மீது இன்றும் குறையாத காதலை வைத்திருக்கும் என் மகன் அமரனின் உன்னதமான காதலை உணர்ந்த நான் ஜானகி மூலமாக உன்னையும் இதோ என் இரண்டு பேத்திகளையும் இவர்களுடன் சேர்ந்து என் அன்பு மகனையும் இங்கே வர வைக்க ஏற்பாடு செய்தேன்..

💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙Where stories live. Discover now