🔱 அமரனின் சித்திராம்பிகை 🔱
🔱பாகம் 33அமரன் சித்ராவிடம் கோபமாக பேசி சென்றதும் கண்கள் கலங்கிய நிலையில் சித்ரா அவள் அறையில் அமர்ந்திருந்த சமயம் அமரனின் வீட்டின் வாசல் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு கண்களை துடைத்து கொண்டு சித்ரா வெளியே செல்ல......வாசலில் நின்று இருந்தது சித்ராவிற்கு பிரேசவம் பார்த்த டாக்டர்
சித்ரா - டாக்டர் நீங்க... நீங்க எப்படிங்க இங்க.....
டாக்டர் - ஏன் நான் உன் வீட்டுக்கு வர கூடாதா சித்து
சித்ரா - வாங்க டாக்டர் உள்ள வாங்க எப்படி இருக்கீங்க
டாக்டர் - நல்லா இருக்கேன் சித்ரா, நீ எப்படி இருக்க,குழந்தை எப்படி இருக்கா, எங்க அமராவதி பாப்பாவ காணோம்
என்று டாக்டர் நலம் விசாரித்த தருணம் அமராவதியும் குரேஷியும் ஒரு அறையில் இருந்து வெளியே வர..இவர்களின் குரலைக் கேட்டு மற்றும் ஒரு அறையில் இருந்து அமரன் வெளியே வந்தவன்
அமரன் - வாங்க டாக்டர் உக்காருங்க, சித்ரா அவங்களுக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வா
டாக்டர் - நோ தேங்க்ஸ்... நான் உங்ககிட்ட சொல்லிட்டு போகலாம் என்று தான் வந்தேன்
அமரன் - என்ன சொல்ல போறீங்க
டாக்டர் - நாளைக்கு பெங்களூரில் இருந்து சென்னைக்கு கிளம்புறேன்.. அதான் கிளம்பும் பொழுது சித்திராவையும் குட்டி பாப்பாவையும் அமராவதியும் உங்களையும் பார்த்து சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்
சித்ரா - என்ன டாக்டர் திடீர்னு ஊருக்கு..
இங்க வந்த வேலை முடித்துடுத்தா
YOU ARE READING
💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙
Fanfictionகோடிஸ்வரர் விஜயகுமாரின் புதல்வன் அமரன்.. அன்றாட உணவிற்காக கிடைத்த வேலையை நேர்மையுடன் பார்க்கும் நாயகி சித்ராம்பிகை @ சித்து ... இயல்பான கதை களமே.