பாகம் 32

124 25 15
                                    

❤️அமரனின்🔱சித்ராம்பிக்கை❤️

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

❤️அமரனின்🔱சித்ராம்பிக்கை❤️

💕பாகம் 32

டாக்டர் - சித்ரா யாருடைய குழந்தையை வயிற்றில் சுமந்தாலோ அந்த உயிருக்கு சொந்தமான தம்பதிகள் பிள்ளையை திரும்ப கேட்கிறார்கள்......

அமரன் - 🙄🙄🙄

என்று டாக்டர் சொன்னதும் அமரனின் தலையில் இடி விழுந்ததைப் போல இருக்க.....

அமரன் - என்ன டாக்டர் சொல்றிங்க அது எப்படி..

டாக்டர் - அது ஒரு பெரிய கதை அமரன், என்னால உங்ககிட்ட போன்ல பேச முடியாது, நீங்க அதனால சித்ராகிட்ட விஷயத்தை சொல்லி அவளை இங்க அழைச்சிட்டு வாங்க, நான் அவளை நேர்ல பார்த்து பேசுறேன்

அமரன் - சரி டாக்டர் நான் இப்போவே கிளம்பி வரேன்

டாக்டர் - இல்ல இல்ல இப்போ வேணா, நீங்க நாளைக்கு சித்ராவை அழைச்சிகிட்டு வாங்க, நான் என் தம்பி கிளினிக்ல தான் இருப்பேன்

என்று சொன்ன dr.கைபேசி அணைப்பை துண்டிக்க..அமரனின் இதயம் இயல்புக்கு மாறாக துடிக்க.. அதே சமயம் பக்கத்து அறையில் இருந்து பிள்ளை அழும் சத்தம் கேட்டு அமரன் அந்த அறைக்குள் ஓடி போனவன் குழந்தையை தன் மார்போடு அணைத்துக்கொண்டு

அமரன் - இல்ல பாப்பா, நீங்க அழாதீங்க, நான் உங்கள யார்கிட்டயும் தர மாட்டேன், உங்கள நான் தரவே மாட்டேன்

என்று அமரன் பேசும் சத்தம் கேட்டு சித்ரா சமையல் அறையில் இருந்து இவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தவள்

சித்ரா - ஏய் அமரா என்னாச்சு உனக்கு.. டேய் உன்னை தான் டா, என்னடா ஆச்சு

💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙Where stories live. Discover now