சித்ரா - அமரா கதவை திற ஏன் இப்படி எல்லாம் பேசுற அதெல்லாம் ஒன்னும் ஆகாது நீ முதல்ல கதவை திற
அமரன் - இல்ல சித்ரா இதுதான் உண்மை நான் விரும்புற.. என்னை விரும்புற யாரும் எனக்கு நிலைக்க மாட்டாங்க நீ தயவுசெய்து கிளம்பு
என்று அமரன் திட்ட விடமாக சொல்ல.....சித்ரா எவ்வளவோ சொல்லியும் அமரன் கதவைத் திறக்காத நிலையில் குரேஷியுடன் சித்ரா அவர் வீட்டிற்கு கிளம்ப....... அவள் வீட்டு வாசலில் குரேஷி தன் காரை நிறுத்தியவன்
குரேஷி - பார்த்துப்போமா உன் பெரியம்மா எதாவது சொல்ல போறாங்க
சித்ரா - இல்ல அண்ணா அவங்க இன்னும் வரல...இதோ வாசலில் செருப்பு இல்ல பாருங்க....
குரேஷி - அவங்க எங்கம்மா போயிருப்பாங்க
சித்ரா - அவங்களுக்கு இன்னொரு குடும்பம் இருக்கு.... அவங்க அங்க போயிடுவாங்க.. வாரத்துல ஒரு நாள் தான் இங்கே வருவாங்க...மாச மாசம் வந்து என் சம்பள பணத்தை வாங்கிடுவாங்க...இது என் அம்மா இருந்த இடம்..இந்த இடத்தை அடமானம் வச்சு அவங்க மாணிக்கத்து கிட்ட பணம் வாங்கினாங்க .... அவன் பெரிய ரவுடி..இந்த இடத்தைக் காட்டி எங்க பெரியம்மா அதிக பணம் வாங்கிட்டாங்க...அத திருப்பி தர முடியலன்னு அவன் என்னை என் பெரியம்மா கிட்ட கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக சம்மதம் கேட்டான்.... எங்க பெரியம்மாவும் வேற வழி இல்லாம அவன் கூட எனக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணாங்க.....ஆனா என்னுடைய நல்ல நேரம் அவனை ஏதோ ஒரு கேஸ்ல ஜெயில்ல புடிச்சு வச்சுட்டாங்க....ஆனா இப்போ என்னுடைய போராத காலம் அடுத்த வாரம் அவன் ஜெயில்ல இருந்து வெளியே வரான்... அவனுக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணி வைக்கனும்ன்னு நேத்து நைட்டு தான் என் பெரியம்மா சொல்லிக்கிட்டு இருந்தாங்க
குரேஷி - என்னம்மா புதுசு புதுசா என்னமோ சொல்ற
சித்ரா - இது புதுசெல்லாம் இல்ல அண்ணா பழைய கதைதான்
குரேஷி - சரி இது அமரனுக்கு தெரியுமா
சித்ரா - தெரியாது
CITEȘTI
💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙
Fanfictionகோடிஸ்வரர் விஜயகுமாரின் புதல்வன் அமரன்.. அன்றாட உணவிற்காக கிடைத்த வேலையை நேர்மையுடன் பார்க்கும் நாயகி சித்ராம்பிகை @ சித்து ... இயல்பான கதை களமே.