பாகம் 38

164 25 9
                                    

🔱அமரனின் சித்ராம்பிக்கை🔱

🔱பாகம் 38

குரேஷி - என்னடா .... அமராவதி அங்கே உக்காந்து இருக்காரா பாரு

என்று குரேஷி சொல்ல... அமராவதி பள்ளியின் எதிரிலே உள்ள சர்ச்சில் அமர்ந்து இருந்தவளை நோக்கி அமரனும் குரேஷியும் செல்ல.... அங்கே அமராவதி கண்களில் கண்ணீருடன் அமர்ந்து இருந்தவள் பெயரை சொல்லி அமரன் அழைக்க

அமரன் - அமரா.......அமராவதி என்னமா நீ இங்க என்ன பண்ற....உன்னை நாங்க ஸ்கூல் வாசலில் தேடிகிட்டு இருக்கோம்.. என்ன மா என்னாச்சு

என்று அமரன் கேட்டதும் அமராவதி கண்களை துடைத்து கொண்டு இவர்களை பார்த்து சிரித்தவள்...

அமராவதி - அது....அது ஒன்னும் இல்ல.. நீங்க வர லேட் ஆகிடுது...அதனால தான் இங்க வந்தேன்

குரேஷி - என்ன பாப்பா ஏன் அழுவுற...

அமராவதி - இல்லையே நான் அழலையே..

குரேஷி - பொய் சொல்லாத..நீ அழுதது நல்லா தெரியுதே

அமராவதி - இல்ல அதெல்லாம் இல்ல

அமரன் - பாப்பா இங்க பாரு

அமராவதி - ம்

அமரன் - உன்னக்கு என்னை பிடிக்கும் தானே..

அமராவதி - ம்

அமரன் - அப்போ உண்மையை சொல்லு என்னாச்சு..

அமராவதி - இன்னைக்கு ஸ்கூல் ல ஒரு பொண்ணு என்னை ரொம்ப bad words ல திட்டிடா..

குரேஷி - என்ன திட்டினாங்க..

அமராவதி - இன்னைக்கு parents name எல்லாம் எழுத சொன்னாங்க...அப்போ நான் சித்ரா அம்மா பெயரையும் விசித்ரா அம்மா பெயரையும் எழுதினேன்.. அதுக்கு என் பக்கம் உக்காந்து இருந்த பொண்ணு உனக்கு அம்மா அப்பா இல்லையான்னு கேட்டா....நான் எனக்கு ரெண்டு அம்மா தான் சொன்னேன்....அப்பா இல்லாம நம்ம எல்லாம் பிறக்க மாட்டோமான்னு அவ சொன்னா... நான் அதுக்கு எனக்கு ரெண்டு அம்மா மட்டும் தான்னு சொன்னேன்...அதுக்கு இன்னொரு பொண்ணு ஆமா ஆமா அப்பா இல்லாம யாருமே பிறக்க மாட்டாங்கன்னு சொன்னா.. அதுக்கு நான் அழகி பாப்பா கூட தான் அப்பா இல்லாம பிறந்தா.. நானும் அப்படி தான்னு சொன்னேன்... அதுக்கு அவ என்னையும் சித்ரா அம்மாவையும் ரொம்ப bad words ல பேசிட்டா....

💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙Where stories live. Discover now