பாகம் 26

172 28 10
                                    

அமராவதியை சித்ராவும் அமரனும் மருத்துவ மனைக்கு தூக்கி செல்ல.... அங்கே குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தவர்கள்.. டாக்டரின் பதிலுக்காக காத்து இருக்க..... சித்ரா கண்களில் கண்ணீருடன் டாக்டரின் வருகையை எதிர் நோக்க

அமரன் - என்ன சித்ரா என்னாச்சு.... பாப்பா ஏன் இப்படி ஒரு நிலைமையில

சித்ரா - தெரில அமரா.... அவ நைட்டு நல்லா தான் இருந்தா.... ஆனா காலையில நான் அவளை தொட்டு பாக்கும் போது பிள்ளை மூச்சு பேச்சு இல்லாம இருந்தாள் எனக்கு பாத்ததும் கை கால் எல்லாம் நடுக்கம் எடுத்துடுது...

அமரன் - சரி சரி அழாத சித்து.. பாப்பாக்கு ஒன்னும் ஆகாது....

சித்ரா - எனக்கு பயமா இருக்கு அமரா.... ஐயோ அவ தாத்தா வந்து கேட்டா நான் என்ன பதில் சொல்வேன்.....ஒரு நொடி கூட வாயை மூடவே மாட்டா.... இப்போ அவளுக்கு இப்படி ஒரு நிலைமை.... எனக்கு ரொம்ப பயமா இருக்கு அமரா....

அமரன் - சித்து... அமரா பாப்பாக்கு ஒன்னும் ஆகாது சித்து..... நீ வயத்துல இருக்குற குழந்தையை நினைத்து பாரு இப்படி விடாம அழுதுகிட்டு இருந்தா உன் ஹெல்த் problem ஆகிடும் சித்து...

சித்ரா - இல்ல அமரா.... அவ சின்ன பிள்ள... அவளுக்கு இப்போ தான் கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி இதயதுல ஆபரேஷன் நடந்துச்சு... அவ அந்த கண்டத்துல இருந்து தப்பி வந்ததே பெருசு.. இப்போ ஏன் அவளுக்கு இப்படி ஆச்சுன்னு தெரியல

அமரன் - அழாத சித்து... அங்க பாரு டாக்டர் வராங்க

சித்ரா - டாக்டர் அமராவதி .. அமராக்கு என்னாச்சு

டாக்டர் - குழந்தையை பாம்பு கடிச்சு இருக்கு மா...நீங்க கவனிக்காம விட்டுட்டிங்க போல..

சித்ரா - என்ன பாம்பா..

டாக்டர் - ம் ஆமா... பாக்க பூ நாகம் போல இருந்துச்சு

சித்ரா - ஐயோ நைட்டு அவ தோட்டத்து பக்கம் போயிட்டு வந்தா... அப்ப அங்க எதாவது ஆகி இருக்குமா...அச்சோ என் குழந்தை இப்போ எப்படி இருக்கா

💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙Where stories live. Discover now