ac 39
சித்ரா உடம்பு நெருப்பாக கொதிக்க ...அமராவதி அவளை அழைப்பதை கூட கேட்க முடியாத நிலையில் அவள் விழிகள் முடி இருக்க ...
அமரன் - சித்ரா... இங்க பாரு... சித்ரா இங்க பாரு டி...
அமராவதி - அம்மா அம்மா..
அமரன் - பாப்பா நீ உன் அம்மாகூட இரு நான் இதோ வரேன்
என்று சொன்னவன் அழகி பாப்பாவை தூக்கி கொண்டு அவன் அறைக்குள் சென்று குழந்தையை அழகாக படுக்க வைத்தபடி வேகமாக சித்ராவின் அறைக்குள் வந்தவன்
அமரன் - பாப்பா நீ போய் அழகி பாப்பாகிட்ட இரு.. நான் சித்ராவை பார்த்துகிறேன்
அமராவதி - என்ன சார் அம்மாவுக்கு என்னாச்சு
அமரன் - உன் அம்மாவுக்கு ஜுரம் இருக்கு மா... நான் உடனே டாக்டர்க்கு கால் பண்றேன்...ஆனா நீ இப்போ இவள் பக்கம் இருந்தா உனக்கு பிவர் வர வாய்ப்பு இருக்கு... சோ ப்ளீஸ் சொன்னா புரிஞ்சிக்கோ செல்லம்... போய் அழகி பாப்பாகிட்ட இரு ...
என்று அமரன் சொன்னவன் ....docto lib மூலம் உடனே மருத்துவரை அழைக்க....இவன் குரலின் சத்தம் கேட்டு குரேஷியும் செந்தாமரையும்.. அமரன் இருக்கும் அறைக்குள் வர
குரேஷி - என்ன மச்சான் என்னாச்சு
அமரன் - சித்ராக்கு பிவர் டா..கண்ணை கூட திறக்க முடியல..ரொம்ப குளிருது போல...டேய் நீ போய் பக்கத்து ரூம்ல என் பெட் சீட் இருக்கு கொண்டு வா..
குரேஷி - ம் இதோ போறேன்..
செந்தாமரை - தம்பி என்னப்பா ஆச்சு.. ஐயோ அம்மாடி சித்ரா
அமரன் - இருங்க இருங்க தாத்தா.. நீங்க கிட்ட வராதீங்க
செந்தாமரை - ஏன் பா என்னாச்சு.. சாதாரண ஜுரம் தானே..
அமரன் - இல்ல தாத்தா டாக்டர் வந்து சொல்லட்டும்... ஒரு வேள covid இருக்க கூட வாய்ப்பு இருக்கு...அப்படி இருந்தா நீங்க எல்லாம் பாதுகாப்பா இருக்கனும்.. வீட்ல வேற 2 பிள்ளைகள் இருக்காங்க.. அதுனால ஒன்னும் மண்ணுமா புளங்காம இருக்கனும்.. நீங்க வெயிட் பண்ணுங்க இன்னும் கொஞ்ச நேரத்துல டாக்டர் வந்துடுவாங்க..
YOU ARE READING
💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙
Fanfictionகோடிஸ்வரர் விஜயகுமாரின் புதல்வன் அமரன்.. அன்றாட உணவிற்காக கிடைத்த வேலையை நேர்மையுடன் பார்க்கும் நாயகி சித்ராம்பிகை @ சித்து ... இயல்பான கதை களமே.