கோரநாடு- 13. காலநெருப்பு

50 5 6
                                    

காலநெருப்பு:

காடு விடுத்துக் கடைபுகுந்த கூட்டத்தி

னூடுபுகுந்து சிக்கினோர் மீட்கவும்- சீலங்கெட்

டோலமிட் எல்லாமு மோடிட வும்பரவும்

காலமெனுங் கோர நெருப்பு.

மெல்ல மெல்ல எழத் தொடங்கிய கதிரவன் நேரமாக ஆகத் தன் சுட்டெரிக்கும் கதிர்களால் மண்ணைக் கொதிக்கச் செய்து விண்ணைப் பிளந்து கொண்டு நடந்தான். நீலநாட்டின் இளவரசனும், கோரநாட்டு இளவரசி மதுரமதியை மணக்க இருந்தவனுமாகிய மகிழனின் மரணச் செய்தி நாடெங்கும் பரவவே, புழுங்கிகிடந்த மக்கள் மனங்களும் கொதிக்கத் தொடங்கின. ஏற்கனவே மன்னரை இழந்து வாடும் நேரத்தில் நாட்டின் மருமகனாக வரப் போகிறவனும் முல்லையாற்றின் ஓரம் சடலமாய்க் கிடந்தது நாட்டு மக்களிடையே மாபெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் உண்டாக்கியது.

குழப்பம் பரவியதால் கடைத்தெருக்களிலும் அரண்மனையை ஒட்டிய பெரிய வீதிகளிலும் கூச்சலும் சலசலப்பும் நிறைந்திருந்தன. இவர்களைக் கட்டுக்குள் கொண்டுவந்து ஒற்றுமையை உண்டாக்க கரம்பத் திருமாறனின் படைவீரர்கள் சாரிசாரியாக வந்து குவிய ஆரம்பித்திருந்தனர். அரண்மனையிலிருந்து யாருக்கும் தெரியாமல் வந்த இளங்குமரன் நகரின் மையத்திலிருந்த அங்காடித் தெருவில் பெருவணிகன் மாயவர்மனது வீட்டிற்கு சென்று அங்கு தங்கியிருந்த மதிமாறனைச் சந்தித்து நடந்த நிகழ்வுகளைக் கேட்டறிந்தான்.

இந்நிலையில் கரம்பத்திருமாறன் மந்திரிகளையும் தன் அரசவைப் பிரதிநிதிகளையும் அழைத்து அவசர ஆலோசனை நடத்தி நிலையைக் கட்டுக்குள் வைக்க ஒரு வழியை உடனடியாக நிறைவேற்றுமாறு பணித்தான். அதன்படி ஒரு சிறுபடை காட்டுக்குள் சென்றது. சகாதேவனை அழைத்து மாலைக்குள் இவையெல்லாம் தனிக்கோவேளின் சதியே எனவும், மக்களுடைய ஆதரவும் அனுதாபமும் தன் பக்கம் திரும்ப வேண்டுமென்றும் அதற்குரிய வழிகளைப் பார்க்குமாறும் கூறிவிட்டுத் தன் அறைக்குச் சென்றான்.

You've reached the end of published parts.

⏰ Last updated: Jan 04, 2018 ⏰

Add this story to your Library to get notified about new parts!

கோரநாடுWhere stories live. Discover now