சட்ட விளக்கம்

45 5 16
                                    

பணியிடத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, தடை மற்றும் குறைத்தல் சட்டம் 2013 (sexual harassment at the workplace prevention, prohibition and redressal act 2013)

பணியிடத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகவும், பாலியல் புகார்கள் தொடர்பான விசாரிக்கவும், புகார்களை நிவர்த்தி செய்யவும், பணியிடத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகளில் இருந்து பாதுகாக்கவும் உருவாக்க பட்டது தான் இந்த சட்டம்.

பாலியல் துன்புறுத்தல் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டம் சரத்து 14 மற்றும் 15 கீழ் சமத்துவதற்கான ஒரு பெண்ணின் அடிப்படை உரிமை ஆகும். இதில் அவளின் வாழ்க்கைக்கான உரிமையும் அடங்கி உள்ளது.

பாலியல் துன்புறுத்தல் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டம் சரத்து 21 கீழ் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை அல்லது எந்த ஓரு தொழிலையும் செய்யும் அடிப்படை உரிமை மீறுவது ஆகும்

சட்டத்தில் பின்னணி:

1992 ஆம் ஆண்டு பவனரிய தேவி எனும் பெண் ராஜஹஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் உள்ள அங்கன் வாடி மையத்தில் கடை நிலை ஊழியராக பணி புரிந்து வந்தார், ஒரு நாள் மாலை வேளையில் அவளின் மேல் அதிகாரி மற்றும் இன்னும் சில கயவர்கள் இணைத்து காமவெறியில் அவளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகினர், இந்த வழக்கு நீதி மன்றத்திக்கு விசாரணை செல்லும் பொழுது ராஜஹஸ்தான் உயர் நீதி மன்றம் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சட்டத்தினை உருவாக்கும் படி அரசுக்கு பரிந்துறை செய்தது அதனை ஓட்டி உருவானது தான் இந்த சட்டம்.

பிரிவு 1:

இந்த சட்டம் இந்தியா முழுமைக்கும் பொருத்தும், இந்த சட்டத்தின் அடிப்படை நோக்கம் பணிபுரியும் ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பான மற்றும் பயம் இல்லாத பணிபுரியும் சூழல் கிடைக்க வேண்டும் என்பதே ஆகும், மேலும் பாலியல் வன்புணர்ச்சி தடுத்தல், தடை செய்தல் மற்றும் குறைத்தல் ஆகியவை இதில் அடங்கும்.

சட்டங்கள் அறிவோம் சரித்திரம் படைப்போம்Where stories live. Discover now