வீழ்ந்து விடாதே பெண்ணே....

23 3 2
                                    


மீண்டும் மீண்டும்

உன்னை காயப்படுத்தும்

அரக்கர்களை

மறந்துவிடு.....

காயத்தினால் உண்டாகும்

கண்ணீரை துடைத்து எரிந்து

வீறு கொண்டு

எழுந்து....

அவர்களின் முன்பு

முன்பு தலைநிமிர்ந்து.....

காயம் உண்டாக்கும்

அரகர்களுக்கு

தலைகுனிவை பரிசாக

அளித்திடு.....

உரிமை என்பது மற்றவர்கள் நமக்கு அளிப்பது அன்று... அது யாரும் நம்மிடம் இருந்து பறிக்க முடியாதது -அம்பேத்கார்

பெண்கள் பல்வேறு பரிமாணங்களையும், முகங்களையும் கொண்ட அழகான இறைவனின் படைப்பு.....

இன்றைய நிலையில் பெண்கள் வரதட்சணை கொடுமை, ஆண் பெண் பாகுபாடு, பணிபுரியும் இடத்தில் பிரிவினை, பாலியல் சீண்டல்கள், துன்புறுத்தல், என் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு தான் இருக்கின்றனர், தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள தேவையான அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை விதிகள் மற்றும் சரத்துகளை காணலாம்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் பெண்களின் நிலையினை உயர்த்தவும் சமூக வேறுப்பாட்டில் இருந்து பாதுகாக்கவும் நிறைய சட்ட பிரிவுகளை உருவாக்கி உள்ளது.

1. சட்டத்தின் முன் அனைவரும் சமம்(சரத்து 14)

2. எந்தவொரு பெண்ணுக்கும் மதம், மொழி, இனம், பிறப்பிடம், பாலினம் முதலியவற்றால் பாகுபாடு காட்டப்பட கூடாது(சரத்து 15(1))

3.அரசாங்கம் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க எந்த ஒரு சட்டம் இயற்றலாம்(சரத்து 15(3))

4. வேலை வாய்ப்பில் ஆண் மற்றும் பெண் பாகுபாடு இன்றி திறமை அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்

சட்டங்கள் அறிவோம் சரித்திரம் படைப்போம்Where stories live. Discover now