பெண்களுக்காக எச்சரிக்கை பதிவு

41 2 1
                                    

பெண்களுக்கு எதிராக facebook, messenger, தவறான உள்ளிடுகள் செய்யும் நபர்களுக்கு எச்சரிக்கை பதிவு....

பெண்களாய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் என்றான் பாரதி, தவம் செய்து பிறப்பெடுத்த பெண் இனத்திற்கு ஒரு காலத்தில் சுதந்திரம் என்பது மறுக்கப்பட்டது, ஆனால் காலத்தின் மாற்றமும், சமுதாயத்தின் வளர்ச்சியும் இணைந்து பெண்கள் இப்பொழுது தான் தங்களை சுற்றியுள்ள தடைகளையும், எதிர்ப்புகளையும் உடைத்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர துவங்கியுள்ளனர், இந்த சூழ்நிலையில் எதற்காக சமூகத்தில் நல்லவர்கள் போன்று வேடம் இட்டு சில கேவலமான ஆண் ஜென்மங்கள் தங்களின் வக்கிரங்களையும், இச்சைகளையும் தீர்த்து கொள்ள பெண்கள் மீது வலுக்கட்டாயமாக தங்களது வலையை வீசுகிறார்கள்,

இது போன்ற கேவலமான ஜந்துகளுக்கு நான் கூறிக்கொள்ள விழைவது ஒன்றே ஒன்று தான், உங்கள் விட்டு பெண்கள் என்றால் போற்றி பாதுகாக்க வேண்டியவர்கள், தங்களின் கதைக்காக, தொழில் வளர்ச்சிக்காக, வியாபாரத்திற்காக facebook, messenger உபயோகிக்கும் பெண்கள் என்றால் கிள்ளு கீரையா,

எங்கே, உங்களின் தாய், தங்கை, தோழி, பெண், மனைவி என யாரிடமாவது உங்களால் எங்களிடம் வக்கிரமாக பேசுவது போன்று பேச முடியுமா, செயல்பட முடியுமா,

உங்களுக்கு வந்த ரத்தம், எங்களுக்கு வந்த தக்காளி சட்டினியா என்னடா உங்க நியாயம்.

ஏன்டா, நீங்க செய்யுற அதே வேலையை நாங்க ஆண்கள் பெயரில் fake id create பண்ணி உங்க வீட்டு பொண்ணுங்கிட்ட நீங்க எங்க கிட்ட பேசுற மாதிரி பேசினா ஒதுக்குவிங்களா, பதில் சொல்லுங்க டா,

பிரின்ட் ரெயூஸ்ட் அக்ஸ்ப்ட் பண்ண உடனே உங்க வக்கிரம் எல்லாத்தையும் எங்க மேல திணிப்பீங்க நாங்க அமைதியா போகணும், பொண்ணுங்க அமைதியாக இருக்கும் வரை தான் உங்க பாடு கொண்டாட்டம், சிலிர்த்து எழுந்த நீங்க எல்லாம் இருக்குற இடம் தெரியாமல் துண்டை காணும் துணியை காணும்னு ஓட வேண்டியது வரும்.

சட்டங்கள் அறிவோம் சரித்திரம் படைப்போம்Where stories live. Discover now