பிரிவு 3(3)நியமிக்கப்பட்ட அதிகாரி அல்லது அங்கரிக்கப்பட்ட அதிகாரிகளின் கடமைகள்/ பொறுப்புகள்...
1. சட்டத்தின் படி பாதுகாப்பான பாலியல் துன்புறுத்தல் இல்லாத பணியிடங்களை உருவாக்குதல்.
2. பாலியல் வன்புறுத்தலில் இருந்து பாதுகாத்தல் மற்றும் அது தொடர்பான கொள்கைகளை உருவாக்குதல்
3. பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விழிப்புணர்பு மற்றும் நோக்கு நிலையை உருவாக்குதல்.
4. பெண்கள் பணிபுரியும் இடத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதுகாப்பு மற்றும் புகார் குழுக்களை உருவாக்குதல்.
5. பாதிக்கப்பட்ட பெண்கள் அளிக்கப்பட்ட புகார்களை சரியாக விசாரிப்பது.
6. புகார்களை பெறும் அதிகாரி திறன் மற்றும் பயிற்சி பெற்ற நபராக இருக்க வேண்டும்.
7. அதிகாரம் பெற்ற அரசாங்க அதிகாரி வருடாந்திர ஆறிக்கையை தயார் செய்து அந்த அந்த மாநில அரசுக்கு அளித்தல் வேண்டும்.
8. மாவட்ட அளவில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை விசாரிக்க மாநில அளவில் அதிகாரம் பெற்ற அதிகாரி ஒரு நபரை நியமிப்பார், அவ்வாறு நியமிக்கப்பட்ட நபர் புகார்களை பெற்றுவிசாரிப்பார்.
புகார்கள் தொடர்பான குழு:-
இந்த சட்டம் இரண்டு வகையான புகார்களை அளிக்கும் வழிமுறைகளை வகுத்துள்ளது.
உள் புகார் குழு: (local complaints committee) :
உள் புகார் குழுவில் பெண்களுக்கு 50% இட ஓதுக்கிடு அளிக்கப்பட வேண்டும், இந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் பதவிக்காலம் 3 ஆண்டுகள் மிகாமல் இருக்க வேண்டும்( அவர்களை நியமித்த நாளில் இருந்து அல்லது பதவி ஏற்ற நாளில் இருந்து கணக்கில் கொள்ளப்படும்)
1. தலைவர்(chairperson): மூத்த பணியாளராக பணிபுரியும் பெண்கள்/ அவ்வாறு இல்லையெனில் அதே அலுவலகத்தில் பணிபுரியும் மூத்த பெண் ஊழியர்.
2. கமிட்டி உறுப்பினர்: 2 நபர்கள்
பெண்களின் நலனுக்காக பாடுபடும் சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட பெண்கள் அல்லது சட்ட அறிவு பெற்ற நபர்.3. உறுப்பினர்கள்:
NGO/ பெண் உரிமை சங்கங்களில் இருந்து பெண்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் நபர்/ பாலியல் துன்புறுத்தல் பிரச்சனைகள் தொடர்பாக விளக்கம் தெரிந்த நபர்.
உள் புகார் குழு பெண்கள் வேலை செய்யும் ஒவ்வொரு நிர்வாக பிரிவு மற்றும் அலுவலகத்தில் அமைக்கப்பட வேண்டும்.
YOU ARE READING
சட்டங்கள் அறிவோம் சரித்திரம் படைப்போம்
General Fictionபெண்களுக்கு எதிராக சமூகத்தில் நடக்கும் குற்றங்கள், தீமைகளை, அநீதிகளை எதிர்த்து தங்களை பாதுகாக்க கொள்ள தேவையான சட்டங்கள் குறித்து இங்கு காண்போம்...