அவனவள் 3

707 34 1
                                    

அவ(ன்)ள் 3

மறுநாள் காலை வலுக்கட்டாயமாக தந்தையையும் தம்பியையும் வீட்டிற்கு அனுப்பி வைத்த பிருந்தா ஐசியூ  வார்டின் வெளியே இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தாள்…. 

ஓரளவு தந்தையை திடப்படுத்தி இயல்பாக்கி சமாளித்தவளுக்கு விஷ்ணுவை சமாளிக்க முடியவில்லை… விஷயம் அறிந்து வானத்துக்கும் பூமிக்கும் குதித்தான். கண்கள் எதையோ வெறித்தது. . நேற்று நடந்ததை நினைத்தவளுக்கு உள்ளம் குமுறியது…

பணம் சம்பந்தமாக கனகுவிடம் பேசிய பிருந்தா நிலம் அல்லது  வீட்டு பத்திரத்தை கேட்பதற்காக பெரியப்பா வாசனின் வீட்டிற்கு சென்றாள். வாசலில் இருந்தே வீட்டிற்குள் குரல் கொடுத்தாள்.

"பெரியப்பா… பெரியப்பா…"

பிருந்தாவின் குரலை கேட்டதும் முன்னேறிய வாசனின் கால்கள் மனைவியை கண்டதும் பின்நகர்ந்து விட வெளியே வந்தார் பர்வதம். 

"வாம்மா வா… உன் தம்பி அப்படி என்னை எடுத்தெறிஞ்சி பேசும் போது, சும்மா இருந்துட்டு இப்போ எங்க வந்த?" என்றார்  கோபத்துடன்

அவர் பேசியதையெல்லாம் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டவள் "பெரியப்பா இல்லையா பெரியம்மா?" என்றாள் நளிந்த குரலில்.

"க்கூம்… என்று அதில் ஒரு க்கு வைத்தவர் "அவருக்கு முடியல படுத்து இருக்காரு நீ என்ன சொல்லனுமோ அதை என்கிட்ட சொல்லிட்டு போ" என்றார் முகத்தை வெடுக்கென திருப்பிக்கொண்டு 

சாதரணமாக பேச வந்ததற்கே இந்த குதி குதிப்பவரிடம் பத்திரத்தை கேட்டால் என்ன செய்வறோ என்று எண்ணியவள் 

"நான் பெரியப்பாவை பாக்கணும்" என்று கூறியதும் அதற்கு மேல் உள்ளே இருக்க முடியாமல் வெளியே வந்தார்  வாசன்.

வாசனின் முகத்தை பார்த்து தயங்கியபடியே பிருந்தா நிற்க

"என்ன பிருந்தா?" என்றார் அணுசரனையாக

"பெரியப்பா அம்மாவுக்கு ஆப்ரேஷன் செய்ய 10 லட்சம் ஆகும்னு ஆஸ்பிட்டல்ல சொல்லிட்டாங்க... பணத்துக்கு கனகு மாமாகிட்ட கேட்டேன்... நிலத்து பத்திரம் கொண்டு வந்தா, வாங்கி தர்றேன்னு சொல்றார் அதான் நம்ம வீட்டோட  பத்திரத்தை வாங்கிட்டு போலாம்னு வந்தேன்" என்றாள். 

அவ(னி)ளின்றி அமையாது என் உலகு (Complete)Where stories live. Discover now