அவனவள் 15

574 33 30
                                    

அவ(ன்)ள் 15

"என்ன கிருஷ்ணா உன்‌ முகம் இன்னைக்கு ரொம்ப டல்லா தெரியுது... வழக்கமான பளிச் பளிச் இல்லையே…  உன் ஆளை இன்னைக்கு பாக்கலையோ?"  என்றபடி கேன்டீனில் அமர்ந்திருக்கும் கிருஷ்ணாவிடம் வந்து அமர்ந்தாள் அஞ்சலி.

அவன் ஆர்டர் செய்த காபியை பணியாள் எடுத்துக்கெண்டு வரவும் அதை வாங்கிக்கொண்டு "தெங்க்ஸ்" என்றவன் அஞ்சலியிடம் திரும்பி "நீ வேற... லவ்வை சொன்னதுல இருந்து மேடமை பாக்குறதே கஷ்டமா இருக்கு… போன் பண்ணாலும் எடுக்குறது இல்ல நேர்ல போனாலும் துரத்தி விட்டுறா என்ன பண்றதுன்னே தெரியல இதுல சோகமா இல்லாம சந்தோஷமா குதிக்கவா முடியும்" என்றான் இருக்கையில் சாய்த்து.

"இது எல்லாம் எதிர் பார்த்தது தானே கிருஷ்ணா… அவளை சம்மதிக்க வைக்கிறது கஷ்டம்னு தெரிஞ்சிதானே நீ லவ் பண்றதுல ஸ்ட்ராங்கான... அப்புறம் இப்படி புலம்பினா எப்படி... அவளை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்றது...  இப்படி சோர்ந்து போகாம அடுத்த என்ன பண்றதுன்னு பிளான் பண்ணா தானே அவளை அசைக்க முடியும்... என்றாள் அஞ்சலி அவன் வாங்கிய காபியை பிடிங்கி தான் பருகியவாறு...

"அதெல்லாம்  ஓகே தான்  அஞ்சலி... அவளுக்கு என்னை பிடிச்சி இருக்கு‌ ஆனா ஏன்‌ என்னை வேண்டாம்னு சொல்றான்னு தான் புரியல... என்னை பார்க்கும் போது அவ கண்ணுல ஒரு சந்தோஷத்தை பாக்குறேன்…  ஆனா அதை ஏத்துக்க மாட்டுறா  வீட்டுல கூட சொல்லிட்டேன்... அம்மா அவளை பாக்கனும் பேசுனும் சொல்றாங்க ஆனா இதெல்லாம் அவ சரின்னு சொன்னாதானே நடக்கும்" என்றான் யோசனையுடனே…

"அதுக்கு ஏன்டா‌ இவ்வளவு  டென்ஷன் ஆகுற?" என்று கேட்டுக்கொண்டே கிருஷ்ணாவின் இன்னெரு பக்கம் வந்து அமர்ந்தான் கிரி.

கிரியை புரியாத பார்வை பார்த்த கிருஷ்ணா "நீ என்ன சொல்ல வர்ற கிரி‌" என்றான்.

"இப்போ என்ன பிருந்தாவையும்  அம்மாவையும் மீட் பண்ண வைக்கனும் அவ்வளவு தானே!" என்றதும் கிருஷ்ணா தலையை‌ ஆட்டிட, 

அவ(னி)ளின்றி அமையாது என் உலகு (Complete)Where stories live. Discover now