💟 ஜீவாமிர்தம் 28

2.4K 144 55
                                    

ராசு அன்று காலையில் வானத்துக்கும், பூமிக்கும் தாவிக் கொண்டு இருந்தான். தன் மாமன் மகளை மணந்து கொண்டது என்னவோ அவளைக் கட்டாயப் படுத்தித் தான்; ஆனால் அவளைப் பார்த்ததும் அவனுக்கு உண்டான காதல் பொய்யில்லை. அதை அவளிடம் உணர்த்தி விட்டு தான் மறு வேலை என்று நினைத்திருந்தான். ஆனால் இனியா இவ்வளவு எளிதில் தன்னை ஏற்றுக் கொள்வாள்;அது மட்டுமில்லாமல் ஊரறிய கணவன் என்ற அங்கீகாரம் தந்து விடுவாள் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.

இரவோடு இரவாக தனது தோட்டத்தில், கடையில், அரிசி ஆலையில் வேலை செய்யும் அனைத்து தொழிலாளிகளுக்கும் உடையும், மதிய விருந்தும் தயார் செய்ய சொல்லி விட்டான்.

"ராசு மாமா இருக்காகளாக்கா?" என்று கேட்ட படி ராசுவின் வீட்டிற்கு முன்பாக வந்து தயங்கி நின்ற ஒரு சிறு பெண்ணிடம்,

"உள்ள வாங்க, உங்க ராசு மாமா வெளியே போயிருக்காங்க. நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேணும்?" என்று மென்மையாக கேட்ட அக்காவை அந்த சிறுமிக்கு மிகவும் பிடித்தது.

"நீ யாருக்கா.... என்னைய போய் வாங்க போங்கங்க.... அப்பத்தா இல்ல; எங்க போச்சு? உன்னைய இங்கண நா பார்த்ததேயில்லையே? " என்று தோரணையாக கேட்ட சிறுமிக்கு வயது எட்டோ ஒன்பதோ தான் இருக்கும்.

சிறு சிரிப்புடன், "என் பேரு இனியா; உங்க ராசு மாமா கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணு, அப்பத்தாவும், உங்க மாமவும் டவுனுக்கு போயிட்டு வர்றோம்னு சொல்லிட்டு போனாங்க; வர ரெண்டு மூணு மணி நேரம் ஆகும். நான் உங்களை மரியாதை பேசினா தானே நீங்களும் எனக்கு மரியாதை குடுப்பீங்க? அதான் வாங்க போங்கன்னு பேசுறேன், இப்போவாவது வந்த விஷயத்தை சொல்வீங்களா?" என்று கேட்ட இனியாவிடம்,

"என்னது...... ராசு மாமா கல்யாணம் பண்ணிகிடுச்சா? எனக்கு சொல்லவேயில்ல....?" என்று அதிர்ச்சி அடைந்த சிறுமியின் அருகில் முழங்காலிட்டு அமர்ந்து,

"நீங்க கேக்கவேயில்லேயே.... அது தான் யாரும் சொல்லியிருக்க மாட்டாங்க, நான் சாப்பிடப் போறேன், நீங்களும் வர்றீங்களா சேர்ந்து சாப்பிடலாம்!" என்று கேட்டவளை திகைப்புடன் பார்த்த சிறுமி

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now