"நீ எப்படியும் ரூம் கதவை திறந்து என்னை கூட்டிட்டு போக வந்துடுவன்னு எனக்கு தெரியும். அதனால தான் நான் வாஷ் ரூம்ல காலாட்டிட்டு உட்கார்ந்து இருக்கேனாக்கும். இப்ப என்ன செய்வ?" என்று அலைபேசியில் கேட்ட தன் மனைவியின் கேள்விக்கு பதிலேதும் சொல்லாமல் ஒரு சிரிப்பை மட்டும் தந்தான் ஜீவானந்தன்.
"டேய் மலைமாடு உன்னை தான் ஒரு கேள்வி கேட்டுட்டு இருக்கேன், பதில் சொல்லாம அங்க என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு?" என்று கேட்ட தன் மனைவியிடம் உச்சுக் கொட்டி,
"உனக்கு ஒரு நிமிஷம் டைம் தர்றேன் மூக்கி, மரியாதையா நீயே வெளியே வந்துடு. இல்ல இந்த மச்சானோட ஆக்ஷன்ஸை லைவ்வா பார்ப்ப, சின்ன வயசுல கஷாயம் குடிக்க மாட்டேன்னு வாயை மூடிட்டு சுண்டெலி மாதிரி நீ ஓடும் போது எந்தப் பக்கம் போனாலும் உன்னை ப்ளாக் பண்ணி தோளுல தூக்கி போட்டு கொண்டு போற உன் செல்ல மச்சானை இப்போ ஒருக்கா வைல்டு ஹல்க்கா பிஹேவ் பண்ண வைக்காத. அது உனக்கு நல்லதில்ல. ஒன் மினிட் டைம் முடிஞ்சிடுச்சு அம்முலு. நீ வெளிய வர்றியா, இல்ல நான் உள்ள வரட்டுமா?" என்று கேட்டவனிடம் சற்று பயம் கலந்த ஆர்வத்துடன்,
"நீயும் வரக் கூடாது. நானும் வர மாட்டேன். ஆமா உன்னால எப்படி உள்ள வர முடியும்? கதவை உடைக்கப் போறியாடா?" என்று கேட்டாள் கவிப்ரியா.
"உங்க மூட் ஸ்விங் பத்தி நமக்கு தெரியாதா மூக்கி..... நீ உள்ள பூட்டிக்கிட்டு உட்கார்றப்போ ஒவ்வொரு தடவையும் கதவை உடைச்சுட்டு இருந்தா எத்தனை கதவு செய்றது? இந்த ரூம் நம்ம ப்ரைவேட் கிம்டம்..... இதுல நான் இல்லாம நீ எங்கயுமே தனியா போற வேலையெல்லாம் நடக்காது. இன்க்லூடிங் வாஷ்ரூம்ஸ் டூ.... சரி உனக்கான ப்ரைவஸிய டிஸ்டர்ப் பண்ண வேண்டாம், கொஞ்சம் டீசண்டா இருப்போமேன்னு பார்த்தா ஆட்டமா காட்டுற? இரு வர்றேன்!" என்று சொல்லி விட்டு குளியலறையின் மறுபுறச் சுவர் பக்கத்தில் போடப் பட்டிருந்த ஆளுயர டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடியை சற்று நகர்த்தி விட்டு அதற்குப் பின்னால் இருந்த குளியலறையின் மறுபுறச் சுவரின் ரகசியமாக வைத்திருந்த கதவை திறந்து கொண்டு அவளிடம் சென்றவன் அவளைக் கண்டதும் முகம் சுளித்தான்.
YOU ARE READING
கண்டேன் என் ஜீவாமிர்தம்✔
Romanceபூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்...