💟 ஜீவாமிர்தம் 31

2.4K 124 44
                                    

"நந்து எங்கடா போறோம்?" என்று கேட்ட படி அவன் தோளில் சாய்ந்து கொண்டு அமர்ந்து இருந்த கவிப்ரியாவிடம், "அப்படியே ஒரு ரொமான்டிக் ரவுண்ட்ஸ் தான்.
நீங்களும் திருட்டுத்தனம் செஞ்சு ஜெயிச்சு என் ஆசையும் தாத்தாட்ட சொல்லி ஓகே பண்ண வச்சுட்டீங்கல்ல மூக்கி; அதுக்கு உங்களுக்கு முதல்ல தேங்க் பண்ணணும். ரொம்ப தேங்க்ஸ் அம்முலுக்குட்டி!" என்று அவள் புறம் திரும்பி புன்னகைத்தவனிடம்,

"உனக்காக எதுவுமே கேக்காம பாகி, ராகி, எனக்கு, ஷைலு, இனியாவுக்குன்னு எல்லாருக்கும் தேவையானதை தானேடா நீ கேட்ட.... அதுக்கு நாங்க தான் உனக்கு தேங்க் பண்ணணும். வீ ஆர் என்கேஜ்ட்....... ஐ'ம் கோயிங் டூ கெட் மேரீட் வித் மை மச்சான் சூன்...... மீ வெரி எக்ஸைடட்டா நந்து! ரூஃப் திறந்து விடேன்ப்பா. எனக்கு கொஞ்சம் ப்ரெஷ் ஏர் வேணும்!" என்று துள்ளிக் குதித்தபடி  சொன்னவளை அருகில் இருத்தி தன் இடக்கையால் அழுத்திப் பிடித்துக் கொண்டவன்,

"சின்னக் குழந்தை மாதிரி ஜங்கு புங்குன்னு குதிக்காத கேப்ஸி. எல்லாரும் ஓகே சொல்லி கல்யாணத்துக்கு நல்ல நாள் பார்க்குறோம்ன்னு சொல்லிட்டாங்க தான். ஆனாலும் கல்யாணம் ஆகுற வரைக்கும் கொஞ்சம் அடக்கி வாசி. எல்லாம் நல்லபடியா நடக்கணும். ஒரு பிரச்சனையும் வந்துடக்கூடாதுன்னு எனக்கு கொஞ்சம் பயமாயிருக்கு! நீ என்னடான்னா கொஞ்சம் கூட டென்ஷன் இல்லாம இவ்வளவு ஜாலியா குதிச்சுட்டு இருக்க......" என்று சொன்ன தன் மாமன் மகன் முகத்தில் முதல் முறையாக சற்று பதட்டத்தையும், பயத்தையும் பார்த்தாள் கவிப்ரியா.

அவளுக்கு ஜீவாவின் இந்த பதட்டம் சிரிப்பை வரவழைத்தது. அவள் பார்த்தவரையில் அப்பா, மகன் இருவரும் எந்த ஒரு விஷயத்துக்கும் பெரிதாக அலட்டிக் கொள்கிற வகையில்லை. ஆனால் ஜீவாவின் இந்த முரண்பாடு அவளுக்கு பிடித்திருந்தது.

"இவ்வளவு நாள் கவியை கல்யாணம் பண்ணி பத்திரமா பார்த்துக்குறேன்னு கதை விட்டுட்டு இருந்தல்ல மச்சான்? இப்போ நிஜமாவே அதை செய்ய சொன்னவுடனே பயப்படுறியா? பாகி, ராகிக்கு ஃபேவர் பண்ணினது கூட என் அண்ணன் தம்பிங்கள கரெக்ட் பண்ணிட்டா உனக்கு ரூட் க்ளியரா இருக்கும்ன்னு நினைச்சு தானே?" என்று சிரிப்புடன் கேட்டவளின் தலையில் அழுந்த குட்டினான் ஜீவானந்தன்.

கண்டேன் என் ஜீவாமிர்தம்✔ Where stories live. Discover now