மூங்கில் நிலா -10

3.4K 103 13
                                    

வனி கலக்கமாய்  வசியை ஏறிட்டாள்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

வனி கலக்கமாய்  வசியை ஏறிட்டாள். "என்ன  சொல்லணும்  வசி? "

வசி "உனக்கு  என்ன ஆச்சு  வேணி?  நீ  நான்  பார்த்த வனியே இல்லையே. உன்  ரூம்ல  மெடிடேஷன்  கோர்னெர்  இருக்கு, நீ  நைட்ல  கனவு கண்டு  உளறர வனி. வசி  வசி  என்னை  விட்டுட்டு போயிடாதே  போயிடாதேனு  கதறி  அழுவறே, அப்படியே  தூங்கிப் போயிற.

உன்  ரூம்ல  லாவண்டர் மூலிகை  வாசனை பரவியிருக்கு. நீ  எனக்கு  வித்தியாசமா  தெரியறடி. மறந்தும்  கூட உன் வாயில  இருந்து  வாசு  பேர கூட  நீ  சொல்லல. உனக்கு  என்னடி  ஆச்சு?  நீ  இப்படி  கஷ்டப் படறத  என்னால  பாக்க முடியலடி " வசி  வனியை உலுக்கினான்.

வனி கண்களில்  நீர்  சுரந்தது. "நான்  தூக்கத்தில்  உளறரேனா? " வனி பரிதாபமாய் கேட்டாள். வசி ஆம்  என்பது  போல  தலையசைத்தான்.

வனி தொடர்ந்தாள் "நான்  நிம்மதியா தூங்கி பன்னிரண்டு  வருஷங்களுக்கு மேல  ஆயிடுச்சு  வசி. இந்த  கனவுகள்  எனக்கு புதிசு இல்ல,  பழகிடுச்சிடா. ஆங்  அந்த  லாவண்டர் வாசனை  திரவியம், அது  பெட்ல  தெளிக்காட்டி  என்னால  தூங்கவே  முடியாது.

ரொம்ப  மைண்ட்  டிஸ்டர்ப்  ஆவறப்ப இந்த  கனவுகளும்  உளறல்களும்  வரும். வீட்ல யாருக்கும்  தெரியாது. என் ரூம்  மாடில  இருக்கறனால  எந்த சத்தமும்  கேட்காது. தியானம்  செஞ்சா கொஞ்சம்  பெட்டெர்  அ  இருக்கும்னு தான் ரூம்லே  மெடிடேஷன்  கோர்னெர்  வெச்சியிருக்கேன் " கோர்வையாய்  இயம்பினாள்.

வசிக்குள் ஏதோ  பிறழ்வது  போல  இருந்தது. "என்னடி  சொல்லற  நீ, நீ  எவ்ளோ  தெளிவான  பொண்ணு, தைரியமா  இருக்கறவதானே? 

மூங்கில் நிலா (Completed)Where stories live. Discover now