வசீகரன் @ வசி
வன மோகினி @ வேணி
மற்றும் பலரோடு நம்ப மூங்கில் நிலா பயணம் தொடர இருக்கின்றது. முதல் காதல் சில சமயங்களில் விதி வசத்தால் முறிந்து போகலாம். பல சமயங்களில் விதியே கூட அதை திரும்ப சேர்த்து வைத்து அழகும் பார்க்கலாம். அன்பு பலரோட...
மேலும் பல இடங்களை சுற்றியவர்கள் அலைந்து களைத்து ஹோட்டல் திரும்பினர். இருவருக்கும் ஒரே அறைதான்.
வனி வீட்டில் வசியோடு ஒன்றாய் தங்கியதிலிருந்து வனிக்குள் இருந்த தயக்கம் பெருமளவு குறைந்து விட்டிருந்தது.
ஆகவே வசியோடு படுக்கையை பகிர்ந்து கொள்வதில் அவளுக்கு தயக்கம் இல்லை.
அதே ஹோட்டலில்தான் confrence என்பதால் மூன்று நாட்கள் கோலாலம்பூரில் கழித்தனர். அதற்குள் சில மலாய் வார்த்தைகளைக் கூட வனி கற்றுவிட்டிருந்தாள்.
வந்த வேலை முடிந்து விட்டிருந்ததால், வசிக்கு வனியை கூட்டிக் கொண்டு திரிய வேண்டும் என்றே தோன்றியது. அதன் படி வனியை மலாக்கா அழைத்து சென்றான்.
UNESCO உலக அமைப்பின் மூலம் தொன்மை நகரமாக அறிவிக்கப்படடிருந்த அம்மாநிலத்தில் போர்த்துகீசியர்களின் ஆண்ட அடையாள சின்னங்கள் மிச்சமிருந்து. பெருமளவில் வெளிநாட்டினர் கூடும் இடமாகவும் பண்டார் மலாக்கா விளங்கியது.
கடல் கடந்து தமிழன் கோலோச்சிய அவ்விடத்தின் விவரங்களை வசி கூற கூற வனி கேட்டு சிலிர்த்தாள்.
இரவில் தெருவெங்கும் மின் விளக்கில் களைக் கட்டிய ஜோன்கேர் ஸ்ட்ரீட்க்கு அழைத்து சென்றான்.
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
"வேணிமா உனக்கு இந்த இடம் ரொம்ப பிடிக்கும். உணவுகளின் சொர்கம்ணு இந்த ஊருக்கு ஒரு பெயரே இருக்கு.
வித விதமான சைனீஸ் மலாய் இந்திய உணவுகள் சுட சுட இங்க கிடைக்கும். அதனாலே இங்கே வெளிநாட்டவர்கள் அதிகம் வருவாங்க.