டிங் டாங் - 4

492 21 5
                                    


எதற்காக அவள் தன்னை அப்படி அழைத்தாள்? சகோதரி எதுவும் கூறி இருப்பாளோ என்ற சந்தேகத்தில் கார்த்திக் முழித்துக்கொண்டிருக்க அவனைப் பார்த்தவள், "ஏங்க எதுக்கு இந்த முழி? கண்ணு வெளில வந்து விழுந்துட போகுது. கடலைமிட்டாய் தான வேணும்ன்னு சொன்னேன்" 

அதிகமாக யோசித்துவிட்டோமோ என்ற யோசனையோடு அவள் கேட்ட கடலை மிட்டாயை எடுக்கச் சென்றான். சில நொடிகள் குழம்பி நின்ற அவன் முகத்தைப் பார்த்துச் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை ஆனாலும் அவனை இன்று எப்படியாவது சீண்டிவிட வேண்டும் அதற்காகவே இப்பொழுது விட்டுவைத்தாள். 

அவள் கேட்ட மிட்டாயை இடையில் வைத்தவன் நகரப் போகத் தடுத்தது அவள் பேச்சு, "நீங்க எப்பயுமே அமைதியா தான் இருப்பிங்களா?" 

அவளைப் பார்த்து மௌனமாய் சிரித்தவன், கடலைமிட்டாயை அவள் அருகில் வைத்து, "இல்லங்க பேச வேண்டிய இடத்துல பேசுவேன்" 

அதுவே போதும் அளவாகத் தான் பேசுவேன் என்று அவன் கூறியது அவளுக்கு உணர்த்த. 

"ஆனா நான் அப்டி இல்லங்க அமைதியா இருந்தா பைத்தியம் புடிச்சிடும்... நாம இருக்க இடமே அதிரனும்" அவள் பேசி முடிக்கவில்லை...

🎶

வரியா....
வரியா....
வரியா....
வரியா.... 
🎶

புதுப்பேட்டை பாட்டை தன்னுடைய ரிங்டோனாக வைஷ்ணவி வைத்திருக்க, அவளுடைய குணத்தை ஏற்கனவே யூகித்திருந்தவன் மனம் இப்பொழுது அடித்து கூறியது அவள் ராங்கி என.

🎶
தண்ணி கொண்டு வார பொண்ணே
தண்ணி நல்லா இல்லே

தண்ணி கொண்டு வார பொண்ணே
தன னா ன ன ன னா
🎶

வைத்திருந்த பாடலுக்கு சிறிதும் கூச்சப்படாமல் கார்த்திக்கிடம் ஒரு நிமிடம் என்று சைகையால் தெரிவித்து, "மம்மி பிஸியா இருக்கேன்..." 

"சாப்டுட்டு இருக்கியா?" சரியாக கேட்டார் அவள் அன்னை. 

"கற்பூரம் தான் போ. அதுக்கு தான வந்தேன், ஒடனே துப்பறிவாளன் மாதிரி உங்களையே பெருமையா நெனச்சுக்க வேணாம். வர்றேன்" என்றதோடு இணைப்பை துண்டித்திருந்தாள்.

டிங் டாங் காதல்Where stories live. Discover now