டிங் டாங் - 23

499 29 5
                                    


முகத்தில் சில ஈர துளிகள் பட சட்டென கண் விழித்தவன் கண்ணை கசக்கியபடி சுற்றி பார்த்த பொழுது, ஈரத் தலையுடன் கண்ணாடி முன்பு நின்று நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்ட மனைவி தான் அழகாய் காட்சியளித்தாள். கடந்த ஆறு மாத காலமாக இந்த காட்சிக்காக பல நாள் கார்த்தியின் மனம் ஏங்கியதுண்டு. 

"எந்திரிச்சிட்டீங்களா?" ஆமாம் என்றவன் பல் துலக்கி வந்த பொழுது, 

"உள்ளே சீயக்காய் வச்சிருக்கேன், சும்மா அத சாஸ்திரத்துக்கு தலைல வச்சிட்டு ஷாம்பு போட்டுக்கோங்க" என குளியலறையினுள் இருந்த தன்னுடைய துணிகளை எடுத்துக்கொண்டே கூறினாள். 

புரியவில்லை என முழித்தவனிடம் மீண்டும், "இல்லங்க சீயக்காய் போட்டு தான் குளிக்கணுமாம் இன்னைக்கு, அதான் உங்களுக்கு அதுல குளிக்க கஷ்டமா இருக்கும்ல நீங்க கொஞ்சம் மட்டும் தலைக்கு தடவிட்டு..." 

தன்னுடைய கையை கொண்டு அவள் வாயை அடைந்தவன், "குட் மார்னிங் பொண்டாட்டி" என்றபடியே குனிந்து அவள் கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதித்து, "புடவை கட்டலயா?" என கேள்வி எழுப்பினான் சோகமாக. 

"இல்ல நீங்க குளிச்சிட்டு வரதுக்குள்ள மாத்திடுவேன்" சரியென கார்த்தி சென்று குளித்து வர, வைஷ்ணவி வயலட் நிற பட்டுடுத்தி கைகளில் தங்க வளையங்கள் ஆட, தன்னுடைய நீண்ட கூந்தலை இன்னும் உலர்த்தும் பணியிலிருந்தாள் வைஷ்ணவி. 

முகத்தில் என்றும் இருப்பதை விட இன்று பொலிவு அதிகமிருந்தது, அதை மேலும் அழகாக்க, நெற்றி வகுடில் செந்நிறமாய் குடும்பம் அவளை தன்னவள் என கார்த்திக்கு நினைவூட்ட உள்ளுக்குள் சொல்ல முடியாத மகிழ்ச்சி கார்த்திக்கு. 

தன்னை அதிகம் நேசிக்கும் பெண், அதிகம் நம்பும் பெண் மனைவியாய் கிடைக்க எந்த ஆணுக்கு தான் கர்வம் எழாமல் இருக்கும்? "வைஷ்ணவி" என கட்டிலின் நுனியில் அமர்த்தவாக்கில் கார்த்தி அழைக்கவும், 

ஈர துண்டை கட்டிலில் போட்டு அவன் முகம் பார்த்தாள். அவள் போட்ட துண்டை எடுத்து அங்கிருந்த ஒரு நாற்காலியில் விரித்துவிட்டு, "தலையை துவட்டி விடுறியா?" 

டிங் டாங் காதல்Where stories live. Discover now