டிங் டாங் - 25

756 31 14
                                    

'சாரி'

'சாரி'

'சாரி'

'சாரி'

'சாரி'

இதோடு முப்பதுக்கும் மேற்பட்ட குறுந்செய்திகளை வரிசையாக அனுப்பியாயிற்று வைஷ்ணவி பக்கமிருந்து, ஆனால் எந்த மன்னிப்பிற்கும் பதில் தான் கார்த்தியிடம் வரவில்லை. 

அவனுடைய கோவத்தின் நியாயத்தை உணர்ந்து, கணவனின் வார்த்தையில் மட்டும் தான் தவறுள்ளது என்று புரிந்தது, என்ன இருந்தாலும் அவனை கை நீட்டி அடித்திருக்க கூடாதென்று மனம் வருந்த தான் கணவனுக்கு கடந்த ஒரு மணி நேரமாக செய்தி அனுப்பிக்கொண்டே இருப்பது.

இன்றோடு ஐந்து நாட்கள் ஆகியிருந்தது வைஷ்ணவி செங்கோட்டை வந்து. அன்று விட்டு சென்றவன் தான், அதன் பிறகு இருவரும் ஒருமுறை கூட கைபேசியில் கூட பேசிக்கொள்ளவில்லை. 

உன் வீட்டிற்கு போ என்று சொன்னவன் பேச்சை கோவத்தில் செயல்படுத்த முடியவில்லை வைஷ்ணவியால், உன்னை திருமணம் செய்த பிறகு இது தான் என் வீடு என உரிமையாய் அவன் வீட்டிற்கு தான் அவள் கால்கள் சென்றது. உள்ளே நுழைந்த வைஷ்ணவியை பார்த்தவுடன் மகாலட்சுமிக்கு பயம் வந்து ஒட்டிக்கொண்டது. 

"எங்க ம்மா கார்த்தி?" வாசலை பார்த்து கேட்டார் முதல் கேள்வியாக. 

"நான் பஸ்ல தான் த்தை வந்தேன், அவருக்கு நாளைக்கு ஏதோ பெரிய ஆர்டர் இருக்காம், அதான் நாளைக்கு வர என்னால வெயிட் பண்ண முடியாதுன்னு வந்துட்டேன்" 

கண்களை சென்றடையாத சிரிப்பை முகத்தில் தேக்கி நிற்கும் மருமகளிடம் மறு கேள்வி கேட்கும் முன்பே, "ஏனுங்க மஹாராணி வந்துட்டீங்களா..." என சேர்மத்தாய் வந்து நின்றார். 

"மஹாராணி இல்ல... நான் பட்டது இளவரசி... என் செல்ல ராஜமாதாவுக்கு நான் என்ன வாங்கிட்டு வந்துருக்கேன் தெரியுமா?" அவர் கன்னம் கிள்ளி கொஞ்சியவள் கையை தட்டிவிட்டார் பெரியவர். 

"என் மகனையும் மருமகளையும் உன் கைக்குள்ள போட்டது பத்தலையோ உங்களுக்கு..." குத்தலாக பேசியவர் அவளுடைய வாடிய முகத்தை பார்க்கவே இல்லை, "மயக்கி என்ன பயன்? இந்த வூட்டுக்கு வாரிச பட்டது இளவரசியால குடுக்க முடியலையே கண்ணு... ஏன் மருமவளே?" 

டிங் டாங் காதல்Where stories live. Discover now