7 மாறிப்போன திரைக்கதை

956 59 6
                                    

7 மாறிப்போன திரைக்கதை

தன்னையே ஆழமாய் பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதனை ஏறிட்டாள் சக்தி. அந்த மனிதன் யார் என்பது வாசகர்களுக்கு இந்த நேரம் புரிந்திருக்கும்.  ஆம், அவன், எது சரி, எது தவறு, என்று யோசிக்கக்கூடிய நிலையில் இல்லாத, நமது ஆன்டி-ஹீரோ ருத்ரன் தான்.

"சார் ப்ளீஸ், என்னை காப்பாத்துங்க. இவங்க என்கிட்ட தப்பா நடந்துக்க பாக்குறாங்க" என்றாள் ருத்ரனிடம் சக்தி.

அவளது நடுக்கம் நிறைந்த குரல், அங்கு, கையில் கத்தியுடன் நின்றிருந்த உமாபதியையும், அவனது நண்பனையும் நோக்கி ருத்ரனின் பார்வையை திருப்ப செய்தது.

அதே நேரம், வேறு சிலர், இருசக்கர வாகனங்களில் அங்கு வந்தனர். அவர்கள் வண்டியை விட்டு இறங்கி, ருத்ரனுக்கும்,  உமாபதிக்கும் நடுவில் நின்றனர். அவர்களைப் பார்த்த உமாபதி உஷாரானான்.

"இங்க பாரு பைரவா, இந்த விஷயத்துல நீ வராத" என்றான் உமாபதி.

"நீயும், மகாவும் எனக்கு என்ன பண்ணீங்கன்னு நான் இன்னும் மறக்கல. நீ சொன்னா நான் இங்கிருந்து போயிடுவேனா? அதுவும் இப்படி ஒரு டக்கரான குட்டியை விட்டுட்டு?" என்றான் சக்தியை பார்த்து.

ருத்ரனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. பதட்டத்துடன் ருத்ரனை ஏறிட்டான் உமாபதி. வந்திருப்பவர்கள் யார் என்று யூகித்துக் கொண்டான் ருத்ரன். இவர்கள் மகாதேவனின் எதிர் அணியினர். அவர்களுக்குள் ஏற்கனவே ஏதோ பிரச்சனை இருக்கிறது. தான் எழுதி இயக்கிய நாடகத்தின் திரைக்கதை மாறிப்போன விஷயம் ருத்ரனுக்கு புரிந்தது. தான் உண்மையிலேயே சக்திக்காக தான் சண்டையிட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டு விட்டது என்ற உண்மையும் அவனுக்கு உறைத்தது. பைரவனுடன் வந்திருந்தவர்கள் நால்வர். உமாபதியுடன் இருந்ததோ ஒரே ஒருவன்.

சக்தியை நோக்கி ஓரடி எடுத்து வைத்தான் பைரவன். அடுத்த நொடி, அவன் உடல் அதிரும் வண்ணம், அவன் முகத்தில் ஒரு குத்து விட்டான் ருத்ரன். அதை எதிர்பார்க்காத அவன், நிலை தடுமாறி தரையில் விழுந்தான். அவனுடன் வந்த மற்ற நால்வரும் ருத்ரனின் மீது பாய்ந்தார்கள். வெறிபிடித்த பைத்தியக்காரன் மீது அவர்கள் பாய்ந்தால் அவர்கள் நிலை என்னவாகும்? அவர்கள் வெளுத்து வாங்கப்பட்டார்கள். அவர்களை குமுறி எடுத்து விட்டான் ருத்ரன். அதைக் கண்ட உமாபதியும் அவனது நண்பனும் கூட மிரண்டு போனார்கள். அடிதடியை தொழிலாக கொண்ட அவர்களுக்கு தெரியாதா, ஒரே நேரத்தில் நான்கு ரவுடிகளை சமாளிப்பது என்பது சாமானிய விஷயம் இல்ல என்பது? நடந்த சண்டையில் ருத்ரனுக்கும் அடி விழுந்தது. அவனது கன்னத்தில் கிழிசல் ஏற்பட்டு இரத்தம் பெருகியது. ஆனால் அதெல்லாம் அவனை தடுத்து நிறுத்தி விட முடியவில்லை. சக்தியை தொட நினைத்த ஒருவனை அவன் விட்டு விடுவானா என்ன? அடி கொடுத்தே பழக்கப்பட்ட அந்த ரவுடிகளால், ருத்ரனின் பலம் வாய்ந்த குத்துகளுக்கு முன் நிற்கவே முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவர்கள் அங்கிருந்து ஓடத் தொடங்கினார்கள். அவர்களுடன் சேர்ந்து ஓடுமாறு உமாபதிக்கும் சைகை செய்தான் ருத்ரன்.

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )Where stories live. Discover now