38 பிடிபட்டான் ருத்ரன்

861 62 8
                                    

38 பிடிபட்டான் ருத்ரன்

"நம்ம, எங்க வீட்டுக்கு போகலாம்"

ருத்ரனின் பதிலை கேட்ட சக்தி அசந்து போனாள். அவன் உண்மையிலேயே அப்படி கூறினான்? அவளுக்கு தன்னை கிள்ளி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. தன் வீட்டிற்கு வருவதில்லை என்பதில் வெகு பிடிவாதமாய் இருந்தானே? அதற்காக தானே யாருக்கும் தெரியாமல், சென்னையில் இருந்து அவளை கொண்டு வந்தான்? இப்போது எது அவன் மனதை மாற்றியது? இவனை புரிந்து கொள்ளவே முடியாதா?  பேச்சிழந்தவளாய் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

"நீங்க உங்க வீட்டுக்கு போக விரும்பலைன்னு சொன்னீங்களே?" தன்னை அடக்க மாட்டாமல் கேட்டு விட்டாள் சக்தி.

"ஆமாம். நான் எங்க வீட்டுக்கு  போக விரும்பலைன்னு சொன்னேன். ஏன்னா, எனக்கு சப்போர்ட் பண்ண யாரும் இல்லாததால... என் பக்கம் நிக்க யாரும் இல்லாததால... ஆனா இப்போ, எனக்காக நீ இருக்க" அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

சக்திக்கு தொண்டையை அடைத்தது. அவன் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ள காரணம், அவள் தன்னுடன் இருக்கிறாள் என்பதா? அவனுக்கு அவள் மீது அவ்வளவு நம்பிக்கையா? அவன் கழுத்தை ஆசையாய் கட்டிக் கொண்டாள் சக்தி.

"சக்தி, நான் ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு வந்த போது, என் குடும்பம் எனக்கு சப்போர்ட்டா இருக்கும்னு நினைச்சேன். ஆனா, நான் உன்னை பத்தி அவங்க கிட்ட சொன்னப்போ, என்னை சேலத்துக்கு வரவிடாம தடுக்க எல்லாரும் முயற்சி பண்ணாங்க. நான் பைத்தியம் முத்தி உளர்றேன்னு நினைச்சாங்க. என்னை அவங்க கண்ட்ரோல்ல வைக்க நினைச்சாங்க. எனக்கு அவங்க கண்ட்ரோலில் இருக்கிறதுல எந்த பிரச்சனையும் இல்ல... ஆனா, அது அன்பான கண்ட்ரோலா இருக்கனும்ல? இப்போ நான் உன்கிட்ட இருக்கிற மாதிரி...?"

அவன் அவளுக்கு அடங்கி இருக்கிறானா? அவன் கூறியதை கேட்டு திகைத்துப் போனாள் சக்தி, என்றாலும் அவனை குறுக்கீடு செய்யவில்லை.

"ஏன்னு தெரியல, அவங்க இதை எல்லாம் தெரிஞ்சே செய்ற மாதிரி எனக்கு தோணுது" என்றான் வருத்தம் தோய்ந்த குரலில்.

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )Where stories live. Discover now