19 ருத்ரனின் வீட்டில் சக்தி

831 60 7
                                    

19 ருத்ரனின் வீட்டில் சக்தி

தன் முன்னாள் நின்றிருந்த பெண்ணை பார்த்த துர்கா, மலைத்து நின்றாள். அவள் யார் என்பதை யூகிப்பதில் அவளுக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. அவளுக்கு அதிர்ச்சி அளித்த விஷயம் என்னவென்றால், அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிக்கயிறு தான். அதற்கு என்ன அர்த்தம்? வேறொருவரின் மனைவியையா ருத்ரன் கவர்ந்து கொண்டு வந்து விட்டான்? அவன் மருத்துவரிடம் கூறிய வார்த்தைகள் அவளது நினைவுக்கு வந்தது.

*ஒருவேளை அவள் திருமணமானவளாக இருந்தால், அவளது கணவனை நான் கொன்று விடுவேன்* என்று அவன் கூறினான் அல்லவா?

என்ன காரியம் செய்து விட்டான் அவளது தம்பி? உண்மையிலேயே வேறு ஒருவரின் மனைவியையா கடத்திக் கொண்டு வந்திருக்கிறான்? அவன் ஏன் அப்படி செய்தான்? துர்காவின் மனம் என்னென்னவோ யோசிக்க துவங்கியது. அவளுக்கு எப்படி தெரியும், அந்த தாலியை சக்தியின் கழுத்தில் கட்டியது ருத்ரன் தான் என்று?

துர்காவின் எண்ணச் சங்கிலி அறுபட்டது, சக்தி அவளது காரின் கண்ணாடி கதவை தட்டிய போது. துர்கா அந்த கண்ணாடி கதவை கீழே இறக்கிவிட்டாள்.

"தயவுசெய்து என்னை சேலம் போற பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட முடியுமா?" என்றாள் சக்தி.

"சேலமா?"

"தயவுசெய்து எனக்கு ஹெல்ப் பண்ணுங்க மேடம். என்னுடைய வாழ்க்கையை காப்பாத்துங்க. என்னை ஒரு ராட்சசன் அவனோட வீட்ல அடைச்சு வச்சிருந்தான். நான் எப்படியோ கஷ்டப்பட்டு அவன்கிட்ட இருந்து தப்பிச்சு வந்திருக்கேன். தயவு செய்து என்னை இங்கிருந்து கூட்டிகிட்டு போயிடுங்க" என்றாள்.

அவள் ராட்சசன் என்று குறிப்பிட்டது யாரை என்பதை யூகிப்பதில் துர்காவுக்கு பெரிய சிரமம் ஒன்றும் இருக்கவில்லை.

"உங்களோட ஹஸ்பண்ட் சேலத்துல இருக்காரா? நீங்க இப்போ அவர்கிட்ட தான் போகணும்னு நினைக்கிறீங்களா?" என்று வேண்டுமென்றே கேட்டாள் துர்கா, சக்தியின் கழுத்தில் இருந்த தாலியை பார்த்தபடி.

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )Where stories live. Discover now