15 வில்லன்

836 61 7
                                    

15 வில்லன்

ருத்ரனை கண்ட சக்தி திணறிப் போனாள். அவள் கையும் களவுமாய் அகப்பட்டுக் கொண்டு விட்டாளே. அங்கிருந்து தப்பிச்செல்ல அவள் செய்த அத்தனை பிரயத்தனங்களும் வீணாகி விட்டன. அவளது கரத்தை திடமாய் பற்றிக் கொண்டு நின்றான் ருத்ரன். அவனது முகத்தில் கோபம் கொந்தளித்துக் கொண்டிருந்ததை அவளால் நன்றாக உணர முடிந்தது. தன் கரத்தை அவன் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள,  இப்படியும் அப்படியும் திருப்பினாள். அவள் அணிந்திருந்த துப்பட்டாவை எடுத்து, அவள் கரங்களை கட்டினான் ருத்ரன், அவளுக்கு அதிர்ச்சி அளித்து. ஆனாலும் அவளை வீட்டினுள் இழுத்துச் செல்வது அவ்வளவு சுலபமாய் இருக்கவில்லை. சக்தி அதை அவனை அவ்வளவு சுலபமாய் செய்ய விட்டுவிடவில்லை. வேறு வழியின்றி, வழக்கம் போல் அவளை தன் தோளில் தூக்கிக் கொண்டு உள்ளே நடந்தான் ருத்ரன்.

அவளுடைய நடிப்பை ருத்ரன் நம்பியது உண்மை தான். ஆனால் காமாட்சி அவளை நம்பவில்லை. பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல், ஒரு பெண்ணை பற்றி ஒரு பெண்ணுக்கு தானே தெரியும்? சக்தியிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம் காமாட்சிக்கு குழப்பத்தை தந்தது. அந்த மாற்றத்தைக் கண்ட ருத்ரனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி, அவளுக்கு கவலையை அளித்தது. சக்தியின் மீது ஒரு கண் வைப்பது என்று முடிவு செய்தாள். தூங்காமல் விழித்திருந்து சக்தியை கண்காணித்தாள். சக்தி தரைதளம் வந்த போது காமாட்சி சமையலறையில் இல்லை அல்லவா? அவள் மொட்டை மாடிக்குச் செல்லும் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு சக்தியை கவனித்துக் கொண்டிருந்தாள். அவள் படிக்கட்டின் திருப்பத்தில் அமர்ந்திருந்ததால், சக்தியால் அவளை பார்க்க முடியவில்லை. சக்தி பூனை போல் சத்தம் செய்யாமல் அங்கிருந்து நழுவி சென்றதை கண்ட காமாட்சி, விரைந்து சென்று உறங்கிக் கொண்டிருந்த ருத்ரனை எழுப்பி, சக்தியை பற்றி கூறினாள். அங்கிருந்து விரைந்து வந்தான் ருத்ரன். அதன் பின் நடந்தது, நாம் அறிந்ததே.

சக்தியை தூக்கிக் கொண்டு வந்த ருத்ரன், அவளை கட்டிலில் கிடத்தினான். கட்டிலின் மீது உருண்டு சென்று, கட்டிலின் அடுத்த பக்கம் இறங்கினாள் சக்தி.

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )Where stories live. Discover now