40 சக்திக்காக...

806 66 9
                                    

40 சக்திக்காக... 

"சக்....தி..." அந்த இடமே அதிரும் வண்ணம் ஆர்ப்பரித்தான் ருத்ரன்.

அடுத்த நொடி, பைத்தியம் பிடித்தவனை போல, அந்த காரை நோக்கி ஓடினான். அந்த கார் பின்னோக்கி பயணிக்க தொடங்கியது.  அந்தக் காரை ஓட்டிச் சென்றவன் வேறு யாருமல்ல, ருத்ரனின் பண்ணை வீட்டிற்கு வெளியே, சக்தியை கொல்வதற்காக காத்திருந்த மகேஷ் தான். ருத்ரன், தன் காரை பேய் போல  விரட்டிக் கொண்டு வந்ததை பார்த்த அவன் நடுநடுங்கிப் போனான். கீழே கிடந்த பெரிய கல் ஒன்றை எடுத்து, அந்த காரின் கண்ணாடியை நோக்கி எறிந்தான் ருத்ரன். அந்த கல், காரின் கண்ணாடியை தெறிக்க செய்தது. தெறித்த கண்ணாடி சில்கள், மகேஷின் மீது தெறிக்க, கார் அவனது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாய் ஓடி, ஒரு மண் மேட்டின் மீது ஏறி தலைக்குப்புற கவிழ்ந்தது. அவனது வீட்டின் காவலாளிகளும், உமாபதியும் அவனை பின் தொடர்ந்து ஓடி வந்தார்கள்.

இதற்கிடையில்,

சக்தி கீழே விழுந்ததை பார்த்த சிவா, அவளை நோக்கி ஓடினான். அவள் தன் கையில் படிந்திருந்த மண்ணை தட்டியபடி எழுந்ததை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டான்.

"சக்தி, உங்களுக்கு ஒன்னும் ஆகலையே?"

"கீழே இருந்த பள்ளத்தை கவனிக்காம, அதுல காலை வச்சி கீழே விழுந்துட்டேன். அடி ஒன்னும் படல" என்றபடி எழுந்து நின்றாள்.

தான் சுடப்பட்ட விஷயம் கூட அவளுக்கு தெரிவில்லை என்று எண்ணியபடி, கீழே இருந்த பள்ளத்தை கவனித்தான் சிவா. அந்தப் பள்ளம் தான் அவள் உயிரை காப்பாற்றி இருக்கிறது.

"தேங்க் காட்" என்ற படி ருத்ரனை நோக்கி ஓடினான், சக்திக்கு ஒன்றும் ஆகவில்லை என்பதை அவனுக்கு தெரிவிக்க.

குப்புற கவிழ்ந்து கிடந்த காரை நோக்கி ஓடிய ருத்ரன், மகேஷின் சட்டை காலரை பற்றி, அவனை தரதரவென வெளியே இழுத்து போட்டு வெறி பிடித்த ராட்சசன் போல் அவன் முகத்திலும், வயிற்றிலும், மார்பிலும் குத்தத் துவங்கினான்.

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )Where stories live. Discover now