8 சமாதானம்

945 61 6
                                    

8 சமாதானம்

சக்திக்கு உறக்கமே வரவில்லை. நடராஜன் மீது அவள் கொண்டிருந்த நம்பிக்கை அடியோடு அழிந்து விட்டிருந்தது. அவனை திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தையும் அது அழித்துவிட்டிருந்தது. அவளது முடிவை நடராஜனின் பெற்றோரிடம் எப்படி தெரிவிப்பது என்று அவளுக்கு புரியவில்லை. ஆனால், அதை எப்படியும் அவள் செய்து தான் ஆக வேண்டும். அவளைப் பற்றிய எண்ணமே சிறிதும் இல்லாத ஒருவனை எப்படி அவள் திருமணம் செய்து கொள்ள முடியும்? ஒருவேளை அந்த ரவுடிகள் அவளை கொன்றிருந்தால்? அல்லது கற்பழித்திருந்தால்? அப்படி நடந்திருந்தால் அவள் உயிரோடு இருந்திருப்பாளா?

மறுநாள் காலை, அவனது அப்பாவுக்கு ஃபோன் செய்து, இந்த திருமணத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதை கூறி விட முடிவு செய்தாள்.

மறுப்புறம், நடராஜ் பயத்தில் தவித்துக் கொண்டிருந்தான். என்ன நடந்தது என்பது மட்டும் தெரிந்தால், அவனது அப்பா அவனை கொன்றே விடுவார். ஆனால், தனது உயிருக்கு ஆபத்திருக்கும் நிலையில், எப்படி அவன் சக்தியை காப்பாற்றுவதை பற்றி யோசிக்க முடியும்? அவளைக் காப்பாற்றி இருந்தால், நிச்சயம் அந்த ரவுடிகள் அவனை கொன்றிருப்பார்கள். அவனுக்கு தெரியும், நிச்சயம் சக்தி அவன் மீது கோபமாகத்தான் இருப்பாள். அவளை சமாதானப்படுத்தும் வழியை அவன் கண்டுபிடித்தாக வேண்டும். எல்லாவற்றிற்கும் தன்னை தயார் செய்து கொண்டு, அவளுக்கு ஃபோன் செய்தான்.

தனது ஃபோனில் ஒளிர்ந்த அவனது பெயரை பார்த்து, கோபத்தில் பல்லை கடித்தாள் சக்தி. அந்த அழைப்பை அவள் ஏற்கவில்லை. ஆனால் நடராஜ் மறுபடியும் ஃபோன் செய்தான். எரிச்சலுடன் அந்த அழைப்பை ஏற்றாள் சக்தி.

"சக்தி..."

"உங்க கிட்ட பேச நான் விரும்பல... நான் இப்போ யார்கிட்டயும் பேசுற மனநிலையில் இல்ல"

"என்ன ஆச்சு சக்தி?"

"இப்போ எதுக்காக, என் மேல ரொம்ப அக்கறை இருக்கிற மாதிரி என்கிட்ட கேக்குறீங்க?"

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )Where stories live. Discover now