28 நல்லவன்

909 65 4
                                    

28 நல்லவன்

ஜன்னலுக்கு அருகில் வந்து ருத்ரனின் முன்னாள் நின்று கொண்டாள் சக்தி. அவ்வளவு நேரம் நிலவை பார்த்துக் கொண்டிருந்த அவனது விழிகள், அந்த நிலவை விட அதிகமாய் ஒளி வீசிய  சக்தியின் பக்கம் தாவியது. அவள் அவனைப் பார்த்து புன்னகைக்க, பதிலுக்கு புன்னகைக்காமல்

"எதுக்காக நீ விரதம் இருந்த?" என்று தனக்கு நன்றாய் தெரிந்த பதிலுக்கான கேள்வியை எழுப்பினான். அதர்கான பதிலை அவன் அவளிடம் இருந்து பெற வேண்டும் என்று நினைத்திருக்கலாம். அதே நேரம், ஆரம்பத்தில் சிறிதும் பிடிப்பில்லாமல் இருந்த அவளுக்கு, எப்படி திடீரென்று இந்த பிடிப்பு ஏற்பட்டது என்று தெரிந்து கொள்ள வேண்டும். தனக்கு அவளிடமிருந்து ஈடில்லா  முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த அவன், அவள் அதை செய்யும் போது அவனால் நம்ப முடியவில்லை.

"ஏன்னா, நீங்க என்னோட ஹஸ்பண்ட்" என்று உரைத்தாள் அவனுக்கு தெரியாத விஷயத்தை கூறுவதைப் போல.

"ஆரம்பத்துல இந்த கல்யாணத்தை நீ ஏத்துக்கலையே... இப்போ என்ன ஆச்சு? எது உன்னை இந்த ரிலேஷன்ஷிப்பை அக்சப்ட் பண்ண வெச்சது?"

"எனக்கு சேலத்துக்கு திரும்பி போக எந்த காரணமும் இல்ல. நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க. என்னை கண்கொத்தி பாம்பு மாதிரி கவனிச்சுக்கிட்டே இருக்கீங்க. நான் எங்க போனாலும் திரும்பிக் கொண்டு வருவேன்னு சொன்னீங்க. சொன்னிங்க தானே?"

குறுக்கீடு செய்யாமல் அவள் கண்களை கவனித்துக் கொண்டே இருந்தான், அதில் சந்தேகப்படும்படி ஏதாவது தெரிகிறதா என்று.

"இங்கிருந்து தப்பிச்சு போக முடியாதுன்னு தெரிஞ்ச பிறகு, அதை செய்ய நான் ஏன் முயற்சி பண்ணனும்? எங்க அப்பா அடிக்கடி சொல்லுவாரு, நம்ம வாழ்க்கையில எது வந்தாலும் அதை ஏத்துக்கிற மனப்பத்துவத்தை வளத்துக்கணும்னு. நான் அதைத்தான் செய்றேன்"

"நீ... இந்த... மாற்றத்தை... ஏத்துக்கிட்டியா?" வார்த்தைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு, அந்த கேள்வியை உதிர்த்தான்.

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )Where stories live. Discover now