18 சக்தியின் திட்டம்

874 60 6
                                    

18 சக்தியின் திட்டம்

சென்னையை வந்தடைந்த சிவா, நேராக தன் வீட்டிற்கு தான் போனான். அவன் வந்த நேரம், துர்காவும் பரமேஸ்வரனும் காபி குடித்துக் கொண்டிருந்தார்கள். வழக்கறிஞரான பரமேஸ்வரன், நீதிமன்றம் செல்ல தயாராகி இருந்தான்.

"பெரிய மச்சானை கண்டுபிடிச்சிட்டீங்களா?" என்றான் பரமேஸ்வரன்.

"ஆமாம் கண்டுபிடிச்சிட்டேன்"

"இப்போ எங்க இருக்கார் அவர்? எப்படி இருக்காரு?"

அவர்கள் பேசுவதை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள் துர்கா.

"அவன் எப்படி இருக்கான்னு எனக்கு தெரியல. நான் இன்னும் அவனை மீட் பண்ணல"

அதைக் கேட்ட துர்காவின் முகம் தொங்கி போனது.

"ருத்ரா சென்னையில் தான் இருக்கான்" என்றான் சிவா அமைதியாய்.

"சென்னையிலயா?" என்றாள் துர்கா, தாங்க முடியாத சந்தோஷத்துடன் நம்ப முடியாமல்.

"உங்களுக்கு எப்படி தெரியும்?" என்றான் பரமேஸ்வரன்.

"அவனுக்கு சேலத்துல கிடைச்ச புது நண்பர்கள் சொன்னாங்க. அத்தனை பேரும் ரௌடிங்க..." என்று பெருமூச்சு விட்டான் சிவா.

"புது நண்பர்களா? அதுவும் ரவுடிங்களா?" என்றான் பரமேஸ்வரன் நம்ப முடியாமல்.

ருத்ரன் யாரிடமும் ஆழமாய் நட்பு பாராட்டியதில்லை. அவன் அவ்வளவு எளிதாய் யாரையும் நண்பர்களாக ஏற்றுக் கொள்வதும் இல்லை. முக்கியமாய், திரைமறைவு வாழ்க்கை வாழும் மனிதர்களிடம் இருந்து அவன் விலகியே இருந்தான். இப்பொழுது அவர்களுக்கு கிடைத்திருக்கும் செய்தி மிகவும் புதிது. அதனால் தான் அதை அவர்களால் நம்ப முடியவில்லை.

"அந்த ரவுடியோட பேரு மகாதேவன். சொன்னா நம்ப மாட்டீங்க, அவனும் அவனோட கூட்டாளிகளும் ருத்ரனுக்காக எதையும் செய்ய தயாரா இருக்கானுங்க. அவனுக்காக சாகுறானுங்க..."

"நம்பவே முடியலையே" என்றான் பரமேஸ்வரன்.

"ஆமாம்... யாராலயும் நம்ப முடியாது. நான் ருத்ரனோட பேரை சொன்னப்போ, அவங்க முகம் மாறினதை நீங்க பார்த்திருக்கணும்... அந்த ரவுடிங்க முகத்துல அப்படி ஒரு சந்தோஷம்..."

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )Where stories live. Discover now