20 மாயா
தன்னைப் போலவே இருந்த பெண்ணை பார்த்து மலைத்துப் போனாள் சக்தி. அவளால் தன் கண்களை அந்த புகைப்படத்திலிருந்து அகற்றவே முடியவில்லை. அவளை வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்த துர்காவை நோக்கி திரும்பிய சக்தி,
"யார் இந்த பொண்ணு?" என்றாள்.
"இப்போ நீங்க இங்க நிக்கிறதுக்கு அவ தான் காரணம்" என்றாள் துர்கா.
"நீங்க என்ன சொல்றீங்க?"
"அவளால தான், ருத்ரா உங்களை சென்னைக்கு கொண்டு வந்தான்"
"ஆனா ஏன்? எனக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்? நான் அவளை பார்த்தது கூட கிடையாதே..."
" உங்களுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல... ஆனா ருத்ரனுக்கு இருக்கு"
"அவங்க அவருடைய வைஃபா?"
இல்லை என்று தலையசைத்தாள் துர்கா.
"அப்படின்னா அவரோட காதலியா?"
மீண்டும் இல்லை என்று தலையசைத்தாள்.
"அப்படினா அவங்க யாரு?"
"ருத்ரா அவளை காதலிக்கல. ஆனா அவ, அவன் மேல் உயிரையே வச்சிருந்தா. அவ, என் ஹஸ்பண்டோட சீனியர் லாயரோட பொண்ணு. என் ஹஸ்பண்டை சொந்த அண்ணனா நெனச்சா. ஒரு பார்ட்டியில தான் அவ ருத்ரனை பார்த்தா. அவனை அவளுக்கு ரொம்ப பிடிச்சிடுச்சு. கண்மூடிதனமா அவனை காதலிச்சா. எப்ப பாத்தாலும் அவன் பின்னாடியே சுத்திக்கிட்டு இருப்பா. ஆனா, ஏனோ ருத்ரனுக்கு அவளை பிடிக்கல. அப்போ அவன் கல்யாணம் பண்ணிக்கனும்னு எண்ணமே இல்லாமல் இருந்தான். அவன் *டோன்ட் கேர்* னு இருந்ததை பார்த்து அவ ரொம்ப ஃபெட் அப் ஆயிட்டா. ஆனாலும் அவ பின்வாங்கறதா இல்ல. அவனை ஓயாமல் தொல்லை பண்ணிக்கிட்டே இருந்தா"
"அவருக்கு ஏன் அவங்களை பிடிக்கல?"
"குறிப்பிட்டு சொல்ற மாதிரி எந்த காரணமும் இல்ல. ஆனா ஏனோ அவனுக்கு அந்த பொண்ணு மேல எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்ல"
"அப்புறம் என்ன ஆச்சு?"
"ஒரு நாள் அவ எங்க வீட்டுக்கு வந்தா, ருத்ரன் கிட்ட இருந்து முடிவான முடிவை தெரிஞ்சுக்க. ஏன்னா, அவங்க அப்பா அவளுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் பண்ண ரெடியா இருந்தாரு"
YOU ARE READING
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )
Romanceஉச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந...