04

1.9K 173 28
                                    

காலையில் சீக்கிரமே கங்காவை பாலாவின் கடை திறப்பு விழாவிற்கு அழைக்க வந்துவிட்டார் தமயந்தி..

கங்காவும் முகம் மலர.. “புடவை கட்டிட்டு வந்துடுறேன் அத்தை..” என்றாள்.

“சரி சரி.. சீக்கிரம் வா..” என உற்சாகமாக சொன்னவர் சதாசிவத்தையும் அழைத்து விட்டு கிளம்பினார்.

அப்போது தான் அறையில் இருந்து உறக்க கலக்கத்துடன் வந்த கீர்த்தனாவையும் பெயருக்கு அழைத்தார் தமயந்தி.

“எனக்கு காலேஜ்க்கு லேட்டாகிடும்.. நான் வரலை..” என்றாள் கீர்த்தனா.

“சீக்கிரம் கிளம்பிடலாம்.. வந்துட்டு போ கீர்த்தி..” என கங்காவும் அழைக்க.. “நான் வரலை..” என்றாள் கீர்த்தனா.

“ரொம்ப நல்லது..” என மனதுக்குள் நினைத்த தமயந்தி.. “நாங்க போய்ட்டு இருக்கோம்.. நீ அப்பா கூட வந்துடு கங்கா..” என சொல்லிவிட்டு சென்றார்.

பாலா முன்பே கடைக்கு சென்றிருக்க.. தமயந்தியும் ரத்தினவேலும் கிளம்பினர்.

சதாசிவமும் பாலா குடும்பம் மீது கொண்டிருந்த நன்மதிப்பால்.. கங்காவை அழைத்துக் கொண்டு அங்கே கிளம்பினார்.

தன் வாழ்வில் தான் ஆசைப்பட்ட முக்கியமான நிகழ்வு தன் நண்பன் மதனுடன் பேசியபடியே  தாய் தந்தையின் வரவுக்காக காத்திருந்தான் பாலா.

தமயந்தியும் ரத்தினவேலும் தங்கள் மகன் தொழிலில் இன்னும் வளர வேண்டும்.. அவன் ஆசையெல்லாம் நிறைவேற வேண்டும் என எண்ணியபடியே அங்கே வந்து சேர்ந்தனர்.

மதனின் பெற்றோரும் அதே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் அறிமுகம் தேவையின்றி அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தனர் பாலாவின் பெற்றோர்.

“அம்மா பூஜையை ஆரம்பிக்கலாம்.. வந்து விளக்கேத்துங்க..” என அழைத்தான் பாலா.

“கங்கா வந்துடட்டும் டா..” என்றார் ரத்தினவேல்.

கங்காவும் தன் தந்தையுடன் அங்கே வந்து சேர்ந்தாள்.

காதலின் சங்கீதம்..Where stories live. Discover now