06

1.8K 167 23
                                    

கங்கா செய்து கொடுத்த பிரியாணியை நன்றாக இருந்ததாக பாராட்டினான்.அரவிந்த்.

“கீது.. உன் அக்காவுக்கு கல்யாணம் ஆனா தான.. நாம கல்யாணம் பண்ணிக்க முடியும்..” என கேட்டான் அரவிந்த்.

“அவ கிடக்கிறா.. அவளுக்கு கல்யாணம் ஆன பிறகு தான் நாம கல்யாணம் பண்ணிக்கணும்னு கட்டாயமா என்ன..” என அலட்சியமாக பதிலளித்தாள் கீர்த்தனா.

“உனக்கு வேற எக்ஸாம்  வரப்போகுது.. அப்புறம் எப்டி மீட் பண்றது..” என்றான் அரவிந்த்.

“அதெல்லாம் நீ ஏன் கவலைப்படுற.. ப்ரெண்டை பார்க்க போறேன்னு சொல்லிட்டு நான் வர்றேன்..” என சாதாரணமாக சொன்னாள் கீர்த்தனா.

“இன்னைக்கு எங்க போறோம்..” என கேட்டாள் கீர்த்தனா.

“போனதும் தெரிஞ்சுக்கோ..” என்றான் அரவிந்த்.

அரவிந்த் கீர்த்தனாவை அழைத்து சென்றது அந்த ஊரில் இருந்த ஒரு லாட்ஜ்க்கு.

லாட்ஜின் அறைக்குள் நுழைந்து கதவை பூட்டும் வரை.. அமைதியாக இருந்த கீர்த்தனா.. “இங்க எதுக்கு கூட்டிட்டு வந்த..” என கேட்டாள்.

“கீது..” என குழைந்தவன்.. “எத்தனை நாள் தான்.. கிஸ்ஸோடவே முடிச்சுக்கிறது.. அதுக்கு மேல போக வேண்டாமா..” என அவளை அணைத்தான்.

இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனநிலைக்கு எப்படி வந்தாளோ கீர்த்தனா. அதை சாதாரணமாக தான் எடுத்துக் கொண்டாள்..

சில நாட்களே பழகிய ஒருவனுடன் தனியறையை.. படுக்கையை பகிர்ந்து கொள்வதற்கும் தயாராக இருந்தாள்.

சதாசிவம் வேலைக்கு சென்றுவிட.. வீட்டில் இருந்த வேலைகளை முடித்துவிட்டு.. வார பத்திரிகை ஒன்றை புரட்டிக் கொண்டிருந்தாள் கங்கா.

சன் மியூசிக்கில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலை முணுமுணுத்தாள் கங்கா.

முந்தைய தினம் பாலாவின் அறையில் கேட்ட பாடல் ஒலிக்க.. “ஹிந்தியா.. தெலுங்கா.. அதுல கேட்கிறதுக்கு கூட இந்த பாட்டு நல்லா இருந்துச்சுல்ல..” என மனதில் நினைத்தாள் கங்கா.

காதலின் சங்கீதம்..Where stories live. Discover now