42

498 26 18
                                    

தேவியை உறுதியாகப் பார்த்தாள் தாரா.

"நான் சொன்னாத்தானே அப்பா விடமாட்டார்? அவரோட முதலாளியம்மா பேரன் சொன்னா விடுவாருல்ல?"

தேவி மிடறுவிழுங்கினார்.

"எதுக்கு.. தேவையில்லாம.. இந்த விஷயத்துக்கெல்லாம் மாப்பிள்ளையை தொந்தரவு பண்ணிக்கிட்டு..."

தன்னு அவசரமாக, "தாரா தாரா! அம்மா சொல்றதை கேட்காத, நீ அந்த சிடுமூஞ்சி கிட்ட சொல்லி அப்பாவை மிரட்ட சொல்லு! அவங்க வீட்டுக்குப் போனபோது அப்பாவை எப்படி மிரளவைச்சான்!" என்க, தேவி அவனை முறைத்தார்.

"என்ன பழக்கம் இது? மாமாவைப் போயி சிடுமூஞ்சி அதுயிதுன்னு!"

"அவன் அப்பாவையே ஹிட்லர்னு தான் கூப்பிடுவான்.. நீங்க வேற!" எனச் சிரித்தாள் தாரா. கூண்டில் இருந்த பேனர்ஜியும் கீக்கீ எனக் கத்தி ஆமோதித்தது.

கொல்கத்தா கிளம்பும் தினத்தில் பர்வதம்மாள் வீட்டில் அப்பாவை எப்படிப் போட்டு ஆதித் ஆட்டிவைத்தான் என்பதை நினைத்தபோது அவளுக்குமே சிரிப்பு அதீதமாக வந்தது.

ஆதித் மீது கொஞ்சம் நம்பிக்கையும் இருந்ததால் தாரா உறுதியாக, "அம்மா, நீங்களும் தன்னுவும் அடுத்த மாசம் கொல்கத்தாவுல இருப்பீங்க. இங்க ரொம்ப குளிரும், ஸ்வெட்டர் எடுத்து வச்சுக்கங்க," என்றுவிட்டு அழைப்பை வைக்க, பேனர்ஜி கூண்டுக்குள் சிறகடித்துப் படபடத்தது.

"ஹூம்.. எனக்குமே டென்ஷனா தான் இருக்குடா பேனர்ஜி.. பாத்துக்கலாம்!"

"கீக்கீ!"

"நான் லஞ்ச் சாப்பிடப் போறேன்.. உனக்கு என்ன தரட்டும் நான்? ஆப்பிள் தரட்டுமா? இல்லை பருப்பு சாதம் தரட்டுமா?"

"காபார்! காபார்! கீக்கீ!!"

தாரா சிரித்தபடியே சென்று அதற்குப் பழத்துண்டுகள் வைத்துவிட்டு இந்திராணியைத் தேடி சமையலறைக்குச் சென்றாள்.

"ராணிக்கா.. இன்னிக்கு ஸ்பெஷல் என்ன?"

"ஸ்பெஷல் எல்லாம் ஒண்ணுமில்லை.. சாதாரண சாப்பாடுதான் தாரா"

காதல்கொள்ள வாராயோ...Where stories live. Discover now