34

611 42 16
                                    

"ஹாய் தாரா!"

"மனு??"

கல்லூரியெங்கும் 'வருகைதரும் வங்காள இயக்குனர் அபிமன்யூ ராய் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்' என பேனர்களும் சுவரொட்டிகளும் வைத்திருந்ததை தாரா அரைமனதாகக் கவனித்திருந்தாள். ஆனால் அது தனது பெங்காலி நண்பன் மனு தானென நம்பமுடியாமல் திகைத்து நின்றாள் அவள். 

அதற்குள் மனு அவளருகே வந்திருக்க, சுற்றியிருந்த மாணவர்கூட்டம் தங்களுக்குள் அதிசயமாகக் கிசுகிசுத்துக்கொள்ள, தாராவின் தோழி ரோசியும் இருவரையும் மாறிமாறிப் பார்த்துக் குழம்பிப்போக, தாரா அத்துணை பேரின் கவனமும் தன்மீது விழுவது பொறுக்காமல் விலகிச்செல்ல எத்தனிக்க, மனுவும் நடந்தான் அவளுடனே.

"ஹேய்.. என்னாச்சு!? அடுத்தமுறை பார்த்தா உன் செலவுல ஊர் சுத்தலாம்னு சொன்னியே? இப்ப என்ன கண்டுக்காமப் போற?"

வெள்ளந்தியான சிரிப்புடன் வெறும் குறும்போடு அவன் வினவ, முழு விவரம் புரியாமல் ரோஸியும் மற்றவர்களும் வாய்பிளக்க, தாரா கோபமாக நிமிர்ந்து பார்த்தாள்.

"நீங்க கல்கத்தாவுல ஃபேமஸான ஆள்னு ஏன் சொல்லல!?"

"நீ கூடத்தான் காலேஜ் ஸ்டூடண்ட்டுனு என்கிட்ட சொல்லல.. நாமதான் நிறைய பேசிக்கவே இல்லைல்ல.. அதான் தெரியல.. இப்ப உட்கார்ந்து பேசினா எல்லாமே தெரிஞ்சிக்கலாம், வா"

பிடிக்கவந்த கையை பிடிக்குமுன்னே உதறிவிட்டவள், தாழ்ந்த குரலில், "இங்க ஆடிட்டோரியம் முழுக்க உங்க ஃபேன்ஸ் இருக்காங்க. அவங்க முன்னாடி சண்டைபோட விரும்பல. ப்ளீஸ்.. கிளம்பிப் போங்க" என்றாள் இறுக்கமாக.

அவனோ பிடிவாதமாகக் கைகட்டி நின்றான்.

"நம்பர் குடு; நான் போறேன். இல்லேன்னா இங்கயேதான் நிப்பேன்"

அவனது பேச்சில் தாரா வாய்பிளக்க, சிலபல புகைப்படக் கலைஞர்கள் அவர்களைச் சுற்றிக் கூடவிட, தாரா அவசர அவசரமாகத் தன் கைபேசி எண்ணை அவன் நீட்டிய கைபேசித் திரையில் பதித்துத் தர, கண்ணடித்துவிட்டு அவன் நகர, பெரும் கூட்டமொன்று தாராவை சூழ்ந்துகொண்டு கேள்விமேல் கேள்வியாகக் கேட்கத் தொடங்க, தாரா அழாத குறையாக ரோசியைத் திரும்பிப் பார்த்தாள்.

காதல்கொள்ள வாராயோ...Kde žijí příběhy. Začni objevovat