26

769 43 22
                                    

"ஷீத்தல்!!"
உற்சாகத்துடன் எழுந்து ஓடிச்சென்று ஷீத்தலிடம் நின்றாள் தாரா.

"என்ன தாராபென், நேத்து பார்ட்டியெல்லாம் எப்டி போனது?"

"ஹான்.. நல்லா இருந்துச்சு. உங்களுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும். நீங்க மட்டும் இல்லைன்னா--"

அவள் முடிக்குமுன் ஷீத்தல் ஆயாசமாய் முனகியவாறு காதைக் குடைவதுபோல சைகை செய்தாள்.
"ஆ..ஊன்னா உடனே தேங்க் பண்ண ஆரம்பிச்சிடறதா? நன்றி சொல்லி சொல்லியே உன் நாக்கு தேய்ஞ்சு போயிடும் போல! ஃப்ரீயா விடு தாரா, ஃப்ரெண்ட்சுக்குள்ள என்ன தேங்க்ஸெல்லாம்?"

தாரா சிரித்தாள்.

"சரி வாங்க, உட்காருங்க.. எதாச்சும் சாப்பிடறீங்களா?"

"கொல்கத்தாவுக்கு வந்தாலும் கோயமுத்தூரு பழக்கம் விடாது போல!? எனக்கு எதுவும் வேணாம், நீ உட்கார்."

"அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, எதாவது சாப்பிடுங்க.. ராணிக்கா ரொம்ப சூப்பரா சமைப்பாங்க, தெரியுமா? என்னைத் தான் கிச்சனுக்குள்ள விடவே மாட்டேங்கிறாங்க. நான் உங்களை சாக்கா வெச்சு எதாவது சமைக்கறேனே..?"

"நல்ல ஆளுதான் போ! வீட்டுல எல்லா வேலைக்கும் ஆள் வெச்சு, உன்ன மகாராணி மாதிரி ஜம்முனு இருக்கச்சொன்னா, நீ என்னடான்னா சமைக்கிறேன், துடைக்கறேன்னு அலையுற!? ஆதித் சார் இதைக் கேட்டா வீட்ல இருக்கற ஹெல்ப்பர்ஸ் நிலமை என்ன ஆகும் தெரியுமா?"
ஷீத்தல் சிரிப்பும் முறைப்புமாய் வினவ, தாராவோ ஆதித்தின் பெயர் சொல்லப்பட்டவுடனேயே முகம்சிறுத்தாள்.

"அவரு என்ன சொல்லுவார், யாரும் யாரையும் டிபெண்ட் பண்ணாம தன்னந்தனியாகவே இருக்கலாம்னு சொல்லுவார்.."

கசப்பாக அவள் முனக, ஷீத்தல் வினோதமாகப் பார்த்தாள் அவளை. "என்னாச்சு தாரா?"

"இல்ல, ஒண்ணுமில்ல ஷீத்தல்.."

"அட, நான் உன் ஃப்ரெண்டு தானே.. என்கிட்ட சொன்னா என்ன? ஆதித் சார் மேல உனக்கு நல்ல ஃபீலிங் இல்லையா? கல்யாணம்.... புடிக்கலையா?"

காதல்கொள்ள வாராயோ...Where stories live. Discover now