12

847 51 24
                                    

தாரா தன்னறையில் அமர்ந்து நிலைக்கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஏனோ தன் முகமே பிடிக்கவில்லை அவளுக்கு. இயல்புக்கு மாறான அலங்காரம், நகைகள், பட்டுப் புடவை, எதுவுமே பிடிக்கவில்லை. கையின் மருதாணி பிடிக்கவில்லை. ஜன்னலில் வந்த மாருதம் பிடிக்கவில்லை. ஸ்பீக்கரில் ஒலித்த பாட்டு பிடிக்கவில்லை. புடவைகள் சரசரக்க நடந்துகொண்டிருந்த உறவினர்கள் பிடிக்கவில்லை. நெஞ்சை அழுத்தும் ஒருவித செயலற்ற தன்மை பிடிக்கவில்லை. தன் அனுமதியின்றி முகமெல்லாம் வழிகின்ற கண்ணீரும் பிடிக்கவில்லை.

'மத்தியஸ்தர் குடும்பங்களில் கனவுகளுக்கெல்லாம் இடமில்லையா? பெற்று வளர்த்த காரணத்திற்காக அவர்களின் பேச்சைக் கேட்டே வாழ்ந்துவிட வேண்டுமா? நம் ஆசைகளுக்கு மதிப்பில்லையா இங்கே? நினைத்தபடி கைமாற்ற, நாமென்ன பொண்ணா பொம்மையா??'

அவளது தோழிகளோ அவளது நிலையறியாமல் கதைத்துக்கொண்டிருந்தனர் தங்களுக்குள்.

"ஆள பாத்தியாடீ ராஜி?? சும்மா ஆறடிக்கு இருந்தான்.. தாடி மீசையெல்லாம் அப்படியே ரன்வீர் சிங் மாதிரி..."

"இவளுக்கு திடுதிப்புனு கல்யாணம்னு சொன்னப்பவே நான் ஷாக்கானேன் கலா.. அதுக்குள்ள மேல மேல ஷாக்! திடீர்னு கல்யாணம் நிக்குது.. திடீர்னு யாரோ வந்து மாப்பிள்ளையா நிக்கறான்.. என்னென்னவோ நடக்குது. ஆனா ஒண்ணு, வீட்டுல பாத்தவனை விட இப்ப வந்தவன் நல்லாவே இருக்கான்."

"காலேஜ்ல, அவங்கப்பாவுக்கு பயந்துக்கிட்டு சைட் கூட அடிக்காம தயிர்சாதமா இருந்தவ, இப்ப ஹ்ரித்திக் ரோஷன் மாதிரி மாப்பிள்ளைய புடிச்சிட்டா... அவ காட்டுல மழைதான்!"

"ஹ்ம்ம்.. புடிச்சாலும் புடிச்சா, புளியங்கொம்பா புடிச்சிட்டா! கல்கத்தாவாம்.. பெரிய கம்பெனியில வேலையாம்--"

"அடியேய், அவன்தான் அங்க முதலாளியாம்! ஹ்ம்ம்... அதிர்ஷ்டம்தான்!"

அவர்கள் வெளியே செல்ல, தாரா உணர்வற்ற பார்வையுடனே கண்ணில் நீர்வழிய அமர்ந்திருந்தாள்.

காதல்கொள்ள வாராயோ...Där berättelser lever. Upptäck nu