6

890 51 32
                                    

"கல்யாணமா? பாட்டி, என்னதிது? டாடி என்ன சொல்றார்?"

பர்வதம் தலையாட்டினார்.

"உங்கம்மாவுக்கும் அப்பாவுக்கும் இப்போதைக்கு இண்டியாவுல செட்டிலாகற ஐடியா இல்ல. அதான், நானே உனக்குப் பொண்ணுப் பார்க்கலாம்னு இருக்கேன். அதான், உனக்கு எந்தமாதிரி பொண்ணு வேணும்னு கேட்டுட்டு--"

"நோ பாட்டி! உங்ககிட்ட நான் என்ன சொல்லிட்டு கொல்கத்தா போனேன்? நானா கேக்குற வரைக்கும் கல்யாணப் பேச்சை எடுக்கக்கூடாதுன்னு சொன்னனா இல்லையா?"

"எத்தனை நாள்தான் உன் சம்மதத்துக்காக நாங்க காத்திருப்போம் ஆதி? We aren't getting any younger. நாலரை வருஷமா நாங்களும் 'இப்ப கேப்பான், அப்பறம் கேப்பான்'னு எதிர்பார்த்துட்டே பொறுமையா இருந்தோம். ஆனா இன்னும் அதைப்பத்தி நீ வாய் தொறக்காம இருந்தா எப்படி?"

"ப்ச்.. அதுக்காக? பாட்டி.. நான் இந்த கல்யாணம், கமிட்மெண்ட்டுக்கெல்லாம் ரெடியா இல்ல... எனக்கு ஏகப்பட்ட கோல்ஸ், ஆம்பிஷன்ஸ் எல்லாம் இருக்கு. கல்யாணம்ங்கறது, இப்போதைக்கு என்னோட prioritiesல கட்டக்கடைசியா தான் இருக்கு. என்னை விட்டுடுங்க."

பர்வதம் உஷாவைத் திரும்பிப் பார்க்க, அவர் "கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் லட்சியத்தை கன்டின்யூ பண்ணவேண்டிது தானே? யாரு உன்னை தடுத்தா? யூ ஆர் பீயிங் செல்பிஷ் ஆதி..." என்றார் குற்றம்சாட்டும் தொனியில்.

"மாம்.. அந்த வார்த்தையை எனக்கு சொல்ல வேணாம். நான் சுயநலமா இருந்தா, இந்நேரம் அவசியமில்லாம யாரோ ஒரு பொண்ணோட வாழ்க்கைக்காக இவ்ளோ தூரம் ஆர்க்யூ பண்ணிட்டு இருக்கமாட்டேன். பாட்டி, உங்களுக்கு பாராவுல இருந்து ஸாரீஸ் வாங்கிட்டு வந்தேன். பேக்ல இருக்கு. அவங்களுக்கும் கிஃப்ட்ஸ் வாங்கினேன், நீங்களே குடுத்துருங்க.."

அவர் மேற்கொண்டு பேசுமுன் ஆதித் எழுந்து மாடிக்குத் தனது அறையைத் தேடிச் சென்றுவிட, பெற்றோர் இருவரும் கவலையான முகத்தோடு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு பர்வதத்திடம் திரும்பினர். அவர் பெருமூச்செரிந்தார்.

காதல்கொள்ள வாராயோ...Όπου ζουν οι ιστορίες. Ανακάλυψε τώρα