40

438 34 15
                                    

தாராவின் நெஞ்சம் படபடத்தது.

தானா இப்படியெல்லாம் பேசினோமென சந்தேகம் வந்தது உள்ளுக்குள். தாராவின் கோபதாபங்கள் எல்லாம் அவளது தந்தையின் ஆளுகைக்குட்பட்டது தான். வீட்டில் அவளது கோபமெல்லாம் வெப்பமான கண்ணீர்த் துளிகளோடு முற்றுப்பெற்றிடும். தன்னுவின் கோபம் சத்தமெழும்பாத வார்த்தைகளாய் வெளிவரும். தேவியின் கோபம் மட்டும் இதுவரை யாருமே பார்த்ததில்லை. கட்டிய கணவனிடமோ, பெற்ற பிள்ளைகளிடமோ, வெளியாட்களிடமோ, எவரிடமுமே இதுவரை தன் அம்மா கோபமே பட்டுப் பார்த்ததில்லை தாரா. எத்துணை துன்பங்களை சகித்துக்கொண்டு அவர் வாழ்கிறாரென விபரம் புரிந்த வயதில் அவளுக்குக்கூட கோபம் வந்ததுண்டு; ஆனால் தேவி அமைதியின் சொரூபம். மனம் இப்போது அம்மாவை நினைத்து ஆதங்கப்பட்டது. அருகில் அவர் இல்லையே என ஏங்கியது.

எதுவுமே செய்யத் தோன்றாமல் அசதி மேலோங்கக் கட்டிலில் சாய்ந்து கண்மூடினாள் அவள்.

***

ஆதித் தன் வீட்டு நிலைப்படியில் ஸ்தம்பித்து நிற்க, ராஜீவ் செய்வதறியாது கையைப் பிசைந்தான்.

"பாஸ்.. ஏதோ டென்ஷன்ல அப்டி பேசிட்டுப் போயிட்டாங்க.. நீங்க மனசுல எதையும்--"

"வேணாம் ராஜீவ். பேசாத. கிளம்புறியா ப்ளீஸ்?"

ராஜீவ் அமைதியாகத் தலைகுனிந்தான். ஆனால் நகரவில்லை.

ஆதித் இரண்டு கைகளாலும் கேசத்தைக் கோதினான். அங்குமிங்கும் நடந்தான். தலையைப் பிடித்துக்கொண்டு சோபாவில் விழுந்தான்.

பின் கைக்கடிகாரத்தைப் பார்த்தவன், "லேட்டாச்சு. கம்பெனிக்குப் போலாம்" என எழுந்தான். ராஜீவ் குறுக்கிட்டுத் தடுத்தான்.

"நோ பாஸ். ஓடிப்போனா பிரச்சனைகள் சரியாகாது. பேசித் தீர்க்கணும்."

"என்ன பேசணும்? அவதான் சொன்னாளே.. எல்லாம் நடிப்புன்னு!"
ஆதித் இரைந்து கத்த, ராஜீவ் துணுக்குற்றான்.

அவனறிவான், சனிக்கிழமை ஒடிசாவிற்கு நிறுவனர் சந்திப்பிற்காக வந்துவிட்டு, இரு தினங்கள் அங்கே நிலைக்கொள்ளாமல் தவித்துவிட்டு, காலை முதல் வேலையாகக் கிளம்பி வீட்டுக்கு வந்து, அங்கே தாராவைக் காணாமல் திகைத்து, அவள் கல்லூரிக்குச் சென்றது கேட்டறிந்து அவளுக்காக ஆறு மணிநேரங்கள் குட்டிபோட்ட பூனைபோல வாசலையே வழிப்பார்த்துப் பழியாகக் கிடந்தது, நேரம் தாண்டியும் அவள் வராமல் போனதால் பயந்து, பின் அவள் நடந்து வருவதைக் கண்டதும் நிம்மதிப் பெருமூச்சு விட்ட ஆதித்தை.

காதல்கொள்ள வாராயோ...Where stories live. Discover now