21

736 47 20
                                    

"பாஸ்.. எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. விவாண்ட்டா ஹாலை ரிசர்வ் பண்ணியாச்சு, நைட் பத்து மணி வரையில. ஈமெயில்ல எல்லா பார்ட்னர்ஸுக்கும் இன்வைட் அனுப்பியாச்சு. அவங்க மிஸ் பண்ணிடாம இருக்கறதுக்காக அவங்களோட அசிஸ்டென்ட்களுக்கு ரிமைண்டர் அனுப்பியாச்சு. போதும்தானே?
உங்களுக்கு இருந்த கான்ட்ராக்டர் மீட்டிங்கை மாத்தி வைக்கணும். நாளைக்கு மதியம் ஓகேவா?
ஈவெண்ட்டுக்காக மூணு மெனு தயாரிச்சிருக்கோம். நீங்க பார்த்து எது வேணும்னு சொன்னா அதையே ஃபைனல் பண்ணிடலாம்"

ஆதித் லேசாக சிரிக்க, ராஜீவ் குழப்பமாகப் பார்த்தான். "ஏன் பாஸ்..?"

"இல்ல, கல்யாணம் நடந்தப்போ கூட என்கிட்ட இவ்ளோ ஒபீனியன் கேட்கல யாரும். அதை நினைச்சப்ப சிரிப்பு வந்துடுச்சு."

ஆதித்தின் கண்களில் தோன்றி மறைந்த வெறுமையை ராஜீவ் கவனித்தான்.

"நடந்தது நடந்துடுச்சு, விடுங்க பாஸ். நேற்றைப் பத்தியே நினைச்சிட்டு இருந்தா நாளையைத் தொலைச்சிடுவோம்னு எனக்குத் தெரிஞ்ச ஜீனியஸ் ஒருத்தர் சொல்லியிருக்கார்.."

ஆதித் தலையை சரித்துச் சிரித்தான்.
"அது நான் சொன்னது."

முறுவலுடனே ராஜீவின் கையிலிருந்த மெனுக்களை வாங்கி ஒருமுறை பார்த்தவன், பின் ஒன்றைத் தேர்ந்தெடுத்து நீட்டினான்.
"இதை ஓகே பண்ணிடு."

"ஷ்யூர் பாஸ். ஈவ்னிங் உங்க வொய்ஃபையும் மறக்காம கூட்டிட்டு வந்துடுங்க."

ஆதித் பெருமூச்சுடன் புன்னகைத்தான்.
"வேற வழி!?"

*

தாரா சாலையோரம் காத்திருக்க, சொன்னதுபோலவே பதினைந்து நிமிடத்தில் வந்துவிட்டான் அவன். அரைக்கை டீஷர்ட்டும் ஜீன்சும் அணிந்து, கையில் ஒரு சின்ன உணவுப்பெட்டியோடு.

"கல்கத்தாவின் சார்பாக!" என்றவாறு அதைத் தாராவிடம் நீட்ட, அவளும் ஆர்வமாக வாங்கிப் பிரித்தாள் அதை. குட்டிக் குட்டியாக இளஞ்சிவப்பு ரசகுல்லாக்கள் இருந்தன அதில்.

காதல்கொள்ள வாராயோ...Where stories live. Discover now