29

887 51 23
                                    

"காலேஜுக்குப் போகும் முன்னால, எதாவது ஆஞ்சநேயர் கோயில் இருந்தா கூட்டிட்டுப் போறீங்களா?"

சனிக்கிழமை காலை ஒன்பது மணியளவில், கொல்கத்தா பல்கலைக்கழக சாலையில் காரை ஓட்டிய ராஜீவிடம், அருகில் அமர்ந்திருந்த தாரா தயக்கமாகக் கேட்டாள்.

அவளுக்காக ஷீத்தல் வாட்சாப்பில் அனுப்பிய அறிவுரைப்படி அவள் வாங்கித் தந்திருந்த இளஞ்சிவப்பு வண்ண குர்த்தியை அணிந்திருந்தாள். நெற்றியில் சின்னதாய் ஒரு கருப்புப் பொட்டு. தலைக்குக் குளித்திருந்ததால் இன்னும் முழுதாகக் காயாத ஈரக்கூந்தலை ஒரு க்ளிப் மட்டும் அணிந்து படரவிட்டிருந்தாள் தோளோடு.

"தாரா மேடம்.. கொல்கத்தாவுல கோயிலெல்லாம் காலங்காத்தால எவ்ளோ கூட்டமா இருக்கும்னு தெரியுமா? இப்போ உள்ள போனோம்னா மதியம்தான் வெளியில வருவோம்.. அப்பறம் காலேஜுக்கு எப்போ போறது?"

தாரா சோர்ந்துவிட, ராஜீவ் தன் கைபேசியை எடுத்து எதையோ தட்டினான்.

"இந்தாங்க.. யூடியூப் வழி லைவ் தரிசனம்.. ஆஞ்சநேயரை ஆசை தீர வேண்டிக்கங்க!"

தாரா அதில் மலர்ந்து புன்னகைத்து, கைகூப்பி கண்மூடி கண்ணாடித்திரையில் தெரிந்த கடவுளை வேண்டிக்கொள்ளத் தொடங்கினாள். ராஜீவ் அவளைக்கண்டு தனக்குள் சிரித்துக்கொண்டான். அவள் வழிபட்டு முடித்துக் கன்னத்தில் தட்டிக்கொண்டு, பின் சாலையை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். ராஜீவ் கடைக்கண்ணால் அவளைப் பார்த்தான்.

"காலைல பாஸ் கிட்ட பேசினீங்களா?"

"ஹ்ம்ம்.. நீங்க வரும் முன்ன தான். அவருக்கு கொல்கத்தா யுனிவர்சிட்டி வைஸ் சான்ஸலரை தெரியுமாம்.. பேசட்டுமான்னு கேட்டார்."

"ம்ம்?"

"நான் வேணாம்னுட்டேன்"

"அட, ஏங்க? சார் பேசியிருந்தா இப்ப அட்மிஷன் ஈஸியா கிடைச்சுடும்ல?"

தாரா நிதானமாக, "அதனால தான் வேணாம்னு சொன்னேன். கிடைக்கற அட்மிஷன் என்னோட மெரிட்ல கிடைக்கட்டும். நாளைப்பின்ன எல்லா விஷயத்துக்கும் அவரையே எதிர்பார்க்க முடியாதுல்ல..?" என்றிட, ராஜீவுக்குப் பெருமையும் கவலையும் ஒருசேர வந்தது.

காதல்கொள்ள வாராயோ...Where stories live. Discover now