15

751 49 16
                                    

'எட்டு வயது இளையவள்' 'கிட்டத்தட்ட சின்னக் குழந்தை'

இதுவரை அதைப்பற்றிய நினைப்பே இல்லாதிருந்துவிட்டு, சட்டென அது புரிந்ததும் என்னவோபோல ஆகிவிட்டது அவனுக்கு. ஏதோ தவறு செய்துவிட்டதைப் போல இருந்தது.

"என் வயசு என்னன்னு தெரியுமா?"

சட்டென அவன் கேட்கவும் பேச்சை நிறுத்திவிட்டுக் குழப்பமாக நிமிர்ந்தாள் தாரா.

"தெரியலையே.. ஏன்?"

சன்னமான சந்தேகப்பார்வையுடன் அவள் கேட்க, அவன் பெருமூச்சு விட்டான்.
"இருபத்தி ஒன்பது. முப்பது வயசு ஆகிடுச்சுன்னா பொண்ணுக் கிடைக்காதுன்னு தான் பாட்டி அவசர அவசரமா பொண்ணுத் தேடுனாங்க எனக்காக. இந்தக் கல்யாணமும் தடாலடியா நடக்கறதுக்கு அதுதான் காரணம். This is a mistake."

தாரா அதிகம் சலனப்படவில்லை.
"அதனால என்ன? இது ஒரு போலி கல்யாணம் தானே?? நம்ம என்ன நிஜமாவா வாழப்போறோம்? அவங்கவங்க வழியில நாளைக்குப் பிரிஞ்சு போகப்போறோம், அப்பறம் என்ன?"

இருந்தாலும் ஆதித்தின் மனம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவளிடமிருந்து நான்கடி தள்ளி அமர்ந்தவன், அப்போதும் மனம் ஓப்பாமல், எழுந்து சென்று சோபாவில் படுத்துத் தலையோடுகால் போர்த்திக்கொண்டு கண்ணயர்ந்தான்.

தாரா சிறிதுநேரம் வானத்தை வேடிக்கை பார்த்துவிட்டு, தூக்கம் சொக்கியதில் உள்ளே வந்து பார்த்தாள். கட்டிலை விட்டு சோபாவில் அவன் படுத்திருக்கக் கண்டவள், தோளைக் குலுக்கிவிட்டுக் கட்டிலில் படுத்துக்கொண்டாள்.

*

காலையில் ஆறு மணிக்கெல்லாம் ஆதித் எழுந்துவிட்டான். அவள் இன்னும் அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்க, அவன் உடற்பயிற்சிக்காகத் தோட்டத்துக்குச் சென்றான். அவன் திரும்பி வந்தபோது சிதாரா குளித்துத் தயாராகி ஒரு அடர்நீலச் சுடிதாரில் வந்தாள்.

இவனைப் பார்த்ததும் புன்னகையுடன் 'குட்மார்னிங்' சொன்னவளை ஏறெடுத்தும் பாராமல் படியேறிச் சென்றுவிட்டான் அவன். தாரா துணுக்குற்றாள்.

காதல்கொள்ள வாராயோ...Where stories live. Discover now