3

316 59 7
                                    

💚💚💚 காதலை💞 தேடி..💚💚💚

K💞M Part -3

தன் தோளில் யார் கையோ....
அமர்வதை உணர்ந்தவன் திரும்பி பார்த்தான்...

கோபத்தை அடக்கி கொண்டு கதிர் நின்றிருந்தான்...

திரும்பியவனிடம்.. என்ன?? பண்ணிட்டு இருக்கீங்க brother என்றான்...

தடுமாறியவன்...
நான் Cycling வந்தேன்... உங்களுக்கு என்ன?? பிரச்சனை..

Cycling போறது நல்ல விஷயம் தான்... ஆனா உங்க சைக்கிள் ரொம்ப நேரமா.. இங்கேயே நிக்குது போல...

Tire பஞ்சரா??. இல்லையே.... நல்லா தானே இருக்கு...

நான் நிப்பேன் போவேன்... அது எதுக்கு?? உங்களுக்கு...
இது என்ன உங்க ரோடா...வேலைய பாத்துட்டு போங்க sir..

நீங்க சும்மா நின்னா நான் ஏன்?? கேள்வி கேக்க போறேன்...

கோலம் போடற பொண்ண... முழுங்குற மாதிரி பாக்குறீங்க..
தேவ இல்லாம பேச்சு வேற குடுக்குறீங்க... இதெல்லாம் Decent-a இல்லையே!!...

யோவ்... வம்பு பன்றியா?? நான் யார் தெரியுமா என்றான்.. காட்டமான குரலில்...

பெரிய பிரச்சனை ஆகிடுமோ என்ற பதைபதைப்போடு... காயத்ரி நின்றிருந்தாள்..

திரும்பி தன் தங்கையை பார்த்தவன்...அன்னைக்கு ரோஜா பூவ தூக்கி போட்டுட்டு போனவன் இவன் தானா...என்றான் கதிர்...

மௌனமாக ஆமாம் என்று தலையசைத்தாள்...

சரி...நீ உள்ள போ என்றவன்...

இங்க பாருங்க தம்பி..
எனக்கப்புறம்.. எங்கம்மா வயித்துல பொறந்தவ.. எனெக்கென்னனு போக முடியாதுல அதான்...கேக்குறேன்... என்ன??? லவ்வா...

அய்யயோ..நீங்க அண்ணன்னு தெரியாம.. Sorry Sir.
இனிமே Disturb பண்ண மாட்டேன்.. என்றவன்.. சைக்கிளை விருட்டென எடுத்து கொண்டு சென்று விட்டான் ...

வாசல் கேட்டை தள்ளி கொண்டு வந்தவனிடம்.. என்னாச்சு அண்ணா என்றாள்...

ஒரு நாள் உன் தங்கச்சிய கடத்திட்டு போக போறேன் பாருன்னு சொன்னான்...

காதலை 💞 தேடி....#KM StoriesWhere stories live. Discover now