12

213 52 16
                                    

💙💚🧡 காதலை💞தேடி...💙💚🧡

K💞M part -12

என்ன இது..?
செய்தித்தாளின் ஓரத்தில் எதற்காக இவர் என் பெயரை எழுதி வைத்திருக்கிறார்....

இது கதிர்....
எழுதியது தானா..?

முல்லை💞
செய்தித்தாளின் தேதியை பார்த்தாள்...

இன்றைய செய்தித்தாள் தான்.. வீட்டில் இவரை தவிர யாரும் இல்லை.... கதவை திறக்கும்போதே கையில் பேனா வைத்திருந்தாரே...

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் என்னோட பெயரை எழுதி இருக்க வேண்டும்..

சரி....ஏன்???

என்னை எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில், Just like that என் பெயரை கிறுக்கி இருக்க வேண்டும்...

இந்த வெளிப்பாடு...என்ன சொல்கிறது....

கதிர் என் ரசிகரா...?? அல்லது....
கதிர் என்னிடம் உரிமை எடுத்து கொண்டு பழகுவதற்கு என் நிகழ்ச்சியின் மீது கொண்ட ஈர்ப்பு மட்டும் காரணம் இல்லையோ...?
அதையும் தாண்டி...ஒரு வேளை இவர் என்னை....

Coffee சுமாரா இருந்தாலும் திட்டாம குடிச்சிடுங்க.. என்ற படி கதிர் வர.... முல்லை💞 தன் மனதின் கேள்விகளை ஒத்திவைத்து விட்டு புன்னகையுடன் வாங்கி கொண்டாள்...

அவள் செய்தி தாளை டீபாயின் மேல் வைக்க... எதிரில் அமர்ந்து தனது காபியை பருகிய கதிர்...
அப்போது தான் பேப்பரில்
முல்லை💞யின் பெயரை தான் எழுதி இருப்பதை கவனித்தான்...

என்ன..? இது...
இவள் பெயரை எப்போது எழுதினேன்... இன்னும் இவளை காணவில்லை என்கிற எதிர்பார்ப்புடன் உட்கார்ந்து இருந்தபோது என்னையும் அறியாமல் எழுதியிருக்கிறேன்..

முல்லை💞 இதை பார்த்திருப்பாளா..?

ஐயோ!!என்ன நினைத்திருப்பாள்... கூட போன் நம்பர் எழுதி இருந்தால் கூட தவறாக நினைக்க வாய்ப்பு இல்லை.....வெறும் பெயரை மட்டும் பார்த்திருந்தால்...?

ஓசை வராமல் காபி பருகிய...
முல்லை💞 கதிரின் பார்வை பேப்பரில் பட்டதையும்...
அதன் பிறகு அவன் முகத்தில் ஏற்பட்ட துல்லியமான மாற்றங்களையும் கவனித்தாள்...

காதலை 💞 தேடி....#KM StoriesWhere stories live. Discover now